திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300


திருவள்ளவ நாயனார் அருளிச்செய்த, 
ஞானவெட்டியான் - 1500,
மூலம் - பாயிரம் - காப்பு

(விருத்தம்)
பாடல் எண்:- 1
அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுர தமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழுமெந்தன் குருவைப் போற்றி
யிடைகலையின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்தவிநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணையைப் போற்றி போற்றி. 

பாடல் எண்:- 2
குகனருளின் கிருபையினா லிந்நூல் ஞானங்
கூர்ந்துநவ சித்தர்மொழி குறித்து ஆய்ந்து
புகழமிர்தச் செந்தமிழா யிரததைந் நூறு
புகலவும்பூ தலங்களெல்லாஞ் செழித்து வாழ்க
அகமகிழு மம்பிகை பெண் ணருளி னாலே
யவனிதனில் ஞானவெட்டி யருள யானும்
நிகழ்திருவள் ளுவநாய னுரைத்த வேத
நிரஞ்சனமா நிலவு பொழி ரவிகாப் பாமே. 

பாடல் எண்:- 3
நிலவுபொழி இரவிமதி யருளினாலே
நின் றிலங்கு நாதவிந்தி னிருவி காப்பு
வலமிடமாய்ச் சூழ்ந்துவருங் கார சாரம்
வழலையெனு மாமதுர வாணி காப்பு
உலகமதிற் கடல்சூழ்ந்த புவனை வாலை
யோங்கார மூலகண பதியே காப்பு
தவமதித சனகாதி ரிஷிகள் பாதஞ் 
சடாதார சூக்ஷசடா தாரங் காப்பாம். 

பாடல் எண்:-4
சடாதார மதிலிலகுந் தவள வாணி
சரஸ்வதியும் பிரமன்பத மாலின் பாதம்
நீடாழி லட்சுமிப்பெண் ணருளின் பாதம்
நிரஞ்சனுருத் திரன்பாத நேமி பாதங்
கடாகமெல்லா நிறைந்துநின்ற மயேசன் பாதங்
கருணையேஸ் வரியினிரு கமல பாதந்
தடாதசதா சிவத்தின்மனோன் மணியின் பாதஞ்
சாம்பசிவன் பொற்பாதஞ் சந்ததமுங் காப்போம். 

பாடல் எண்:- 5
பாதமடி மூலநடு விந்தின் மூலம்
பராபரையின் வீடுபரப் பிரம வீடு
ஓதுசந்திர புஷ்கரணி மாலின் வீடு
ஓரெழுத்தாய் நின்றிலங்கும் ருத்திரன் வீடு
நாதவிந்தின் மேருமூடி சுடரின் வீடு
நாதாந்த மயேஸ்வரத்தின் வாயுவின் வீடு
சூதமுனி யீசனுற வாடும் வீடு
சோதியெனு மாக்கினையின் காப்புத் தானே. 

பாடல் எண்:- 6
ஆக்கினைக்குள் சத்தம்பிரு திவீ பீட
மப்புவின் வீடுவன்னி வாயுவின் வீடு
ஏக்கமில்லா வாகாச மேரு வீடு
இரவிமதி சுடரிலகு மின்ப வீடு
பார்க்கபணா முடிநடுவில் நடனஞ் செய்யும்
பராசக்தி சிவசிங்கா தனத்தின் வீடு
பூக்குமலர் வாசியிருந் துலவும் வீடு
புகழ்பெரிய வைம்பூதம் புலன்காப் பாமே. 

பாடல் எண்:- 7
பூதாதி யிருந்துவிளை யாடு பீடம்
பொற்கமல மாயிரத்தெட் டிதழின் பீடம்
நாதாக்கள் திருநடன மௌன பீடம்
நந்தியொளி விந்துசெக நாத பீடம்
வேதாந்த பூரணமெய் ஞான பீடம்
வித்தார வாகமத்துக் கதீத மான
ஆதார மூலவன்னி யமர்ந்த பீட
மாநந்த நடனசபை யைந்துங் காப்போம். 

பாடல் எண்:- 8
ஐந்துருவா யுடலெடுத்த வாறின் கூறு
மசடில்லாத் தேகமெண் சா ணாத்துமக் கூறும்
விந்துதித்துச் சடமெடுத்த நாதக் கூறும்
விற்பனமாய்ச் சடமுதித்த காயக் கூறும்
தந்திரமாய் நீர்க்குமிழி யான கூறுந்
தத்துவந்தொண் ணூற்றாறு சைலக் கூறும்
இந்திரியசுக் கிலசுரோணி தத்தின் கூறு
மியம்புதற்குத் தசநாடி யியல்பு காப்போம். 

பாடல் எண்:- 9
தசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்
ஜெகதலத்தி லெனைப்பழித்த செய்திவாறும்
அசைவதிருந் தாக்கையசை யாதவாறு
மடிநடுவு முடிவான கற்ப வாறும்
பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்
பஞ்சபட்சி யஞ்சுநிலைத் திருந்த வாறும்
இசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறு
மிராஜயோ கத்தினருள் காப்புத் தானே. 

பாடல் எண்:- 10
யோகாதி யோகநிலைத் திருந்த பேர்க்கு
முற்பனமாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்
வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்
வெண்சாரை கருநெல்லி விதித்த போக்கும்
போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூநீர்ப் போக்கும்
பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும் 
ஆகாத மனிதர்களை யகற்றும் போக்கு
மசடில்லா மாதுரச குளிகை காப்போம். 

பாடல் எண்:- 11
குளிகைரச மாதுகற்பக் குகையின் மூலங்
குருபூசை குண்டலியின் வாசி மூலம்
வழியறியு மவிழ்தமொடு நோய்கள் தீர
வழலைமுப்பு வைத்தியமுங் கிருத லேகியம்
விழிமடவா ளம்பிகைப்பெண் ணருளி னாலே
விவேகமணி மாத்திரையும் பஸ்பந் தானும் 
தெளிவுபெறுஞ் சுண்ணமொடு செந்தூரங்கள்
திராவகமுஞ் செயநீருஞ் சென்னி காப்போம். 

பாடல் எண்:- 12
சென்னிவளர் சிவசிங்கா தனத்தின் மேலுஞ்
சிதம்பரமா நடனசபை சித்ர கூடம்
வன்னிமதிப் பிரகாச கமல பீட
மதுரவின்ப வமிர்தசர் வாணிபீடம்
உன்னிதமாய்க் கன்னியெனக் கமிர்த மூட்டி 
யுயிருமுடல் நிலைத்திடவு பாயஞ்சொன்னாள் 
இன்னிமித்தம் பொருத்தமெனக் களித்தஞ் ஞான
விருளகற்றிப் பானரச மீந்தாள் காப்போம். 

பாடல் எண்:- 13 (வேறு)
இருள்தனை யகற்றுஞ் சோதி யிகபர வெளியே போற்றி
அருள்தரு ஞான தேசி யகத்தீச ரருளினாலே
திருவுரு தவள வாணி சிரோன்மணிக் கமலந் தன்னில்
அமலர் பொழியு ஞான மமிர்தசெந் தமிழைச் சொல்வோம். 

பாடல் எண்:- 14 (வேறு)
நந்தியொளிப் பிரகாச வட்டத் துள்ளே
நற்கமல மாயிரத்தெட் டிதழைப் போற்றி
உந்திநிலை யறிந்ததிரு மூலர் பாத
முவமையுள்ள காலாங்கி போகர் பாதஞ்
சிந்தையுள்ள மகிழ்ந்தசட்டை முனியின் பாதஞ்
சிவமயங் கண்டகோ ரக்கர் பாதம்
அந்திபக லறிந்தவிடைக் காடர் பாத
மருளுஞ்சக நாதர்பத மர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 15
மதியிருந்து குமுறிவிளை யாடும் வீடு
மகத்தான செங்கதிரோன் மகிழ்ந்த வீடு
பதியிலிருந்து விளையாடு மூல வீடு
பத்திதருஞ் சித்தரும் பரம வீடு
துதிபெறவு நாற்சதுர மேலு நின்று
துலங்குமெழிற் கணபதிவல் லபையைப் போற்றி
நிதிபெறவு மெனையீன்ற குருவின் பாத
நெகிழாம லனுதினமுங் காப்புத் தானே. 

பாடல் எண்:- 16
திருவிருந்து கனலெழுந்து ஆடும் வீடு
சிறந்தசக்தி வல்லபைதன் கணவ னான
மருவிருந்து கொஞ்சுதமிழ் நாவில் மேவு
மகிழ்ந்தமத கரியினிரு தாளைப் போற்றி
கருவிருந்த பெருவீடு தாண்டியப் பால்
கண்குளிர நின்றுநடு வனையி லேறி
மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம்
வணங்கியிந்த நூல்வகையைப் புகழ்வே னாண்டே. 

பாடல் எண்:-17
தந்தைதாய் கருவதனி லுதித்த வாறுந்
தாரணியில் கருத்திரண்டு பிறந்த வாறும்
அந்தமுடன் ஜாதிகுலம் வகுத்த வாறு
மவனிதனிற் பெரியோர்க ளறிந்த வாறும் 
சிந்தைதனி லஞ்செழுத்தைப் போற்றி செய்து 
செப்புகிறே னிந்நூலை யிகழ வேண்டாம்
தந்திரமா முக்கோணந் தன்னில் நின்ற
தந்திமுகன் கமலபதங் காப்புத் தானே. 

பாடல் எண்:- 18
கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி
கனகரத்ன மிலகுதிற மண்ட பத்தில்
மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிஷ் டானம்
வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில்
நிகரொத்த பிரமன்சரஸ் வதியின் பாதம்
நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து
உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு
மோரெழுத்தா நாதவிந்த மைந்த வாறே.  

பாடல் எண்:- 19
சொல்லரிது மந்திர த்துக் கெட்டா வீடு
ஜோதிமணி பூரகத்தி லமர்ந்த மூர்த்தி
வெல்லரிது நாபியதின் கமலத் துள்ளே
விளைந்தவித ழீரைஞ்சு பத்து மேலும் 
வல்லபமாய் நின்றிலங்கு மாலின் தேவி
வளர்ந்தசபைத் திருமாலை வணங்கிப் போற்றித்
தொல்லுலகி லுள்ளபெரி யோர்கள் பாதந்
துதித்திந்நூல் விளம்புகிறே னாண்டே கேளீர். 

பாடல் எண்:- 20
வட்டமிட்ட சட்கோணப் பாரின் மேலும்
வளர்ந்தவித வீராறா மங்கு லத்தில்
திட்டமிட்டவ னாகதத்தில் வீற்றி ருந்த
சிறந்தருளும் ருத்திரனும் ருத்திரியைப் போற்றி
வெட்டவெளி வேதமறை நான்கு மோதும்
வேதமெல்லாந் திருநீறா யான வாறும் 
அஷ்டதிசை யறிந்துணர்ந்த பெரியோர் பாத
மைம்பத்தோ ரட்சரமுங் காப்புத் தானே. 

பாடல் எண்:- 21
ஆறுகொண்ட வம்பலத்தி னின்ற சோதி
யம்பரமாந் தற்பரத்தை யேறி நித்தம்
வீறுகொண்ட வறுகோண வீட்டின் மேலும்
விளங்குமிதழ் பதினாறு மேவு பீடம்
பேறுபெற்ற மயேசன்மயேஸ் வரியு மங்கே
பேணியவ ரிருவர்பதக் கமலம் போற்றிப்
பாரிலுள்ள வேதமறி யாமல் நின்ற
பழம்பொருளைப் பாடுகின்றே னாண்டே கேளே. 

பாடல் எண்:- 22
காலைவட்ட மாலைவட்ட மாகி நின்ற
கதிர்மனையிற் சுருதிமுனை யாடுஞ் சோதி
நீலவட்டங் கொண்டெழுந்து கலைபெண் ணான்கும்
நின்றிலங்கு மாக்கினையி லிதழு மூன்று
ஞாலமதி லாதியந்த ரூப மான
நற்கமல மாயிரத்தெட் டிதழின் மேலும்
ஆலவிட முண்டசதா சிவனைப் போற்றி
யம்பிகையின் கமலபத மர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 23
திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்
சிறந்தசா காக்காலும் வேகாத் தலையுந் தாண்டி
மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி
மதனகலி யானதிரு வல்லி மாது
வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு
மாதாளம்பூ வடிவுமனோன் மணியைப் போற்றிக் 
கரைகடந்து பறையனென்று தள்ளி வைத்த
கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே. 

பாடல் எண்:- 24
அந்தமுள்ள குருவினடிக் கமலம் போற்றி
யன்னைதந்தை யிருவருந்தா னனுபோ கிக்கத்
தந்திரமா யிரவுதனி லணையும் போது
தாதுவிந்து நாதமது மெழுந்தபோதில்
எந்தவுயிர் வேதமறை யறிந்த தாண்டே
யிடும்பரெல்லா நீசனென்று தள்ளி னார்கள்
வத்தவழி போனவழி யிரண்டுஞ் சொல்வேன் 
வகையறியா மாந்தர்களே யறிந்து கொள்வீர். 

பாடல் எண்:- 25
பிரமகுல வேதியராய்ப் பிறந்தார் கோடி
பெருமையுள்ள க்ஷத்திரியராய் பிறந்தார் கோடி
திறமையுள்ள வைசியராய்ப் பிறந்தார் கோடி
தெளிவான சூத்திரராய்ப் பிறந்தார் கோடி
உறவதித நால்வகையாய்ப் பிறந்தார் கோடி
யுள்ளுணர்ந்து பாராமல் தள்ளினார்கள்
அரனருளாற் சபைநிறைந்த வாண்ட மாரே
யாதியிலே சாதிகுல முரைசெய் வேனே. 

பாடல் எண்:- 26
எங்கள்குலஞ் சுக்கிலத்தா லெடுத்த வாறு
மெண்ணரிய சுரோணிதத்தால் வளர்ந்த வாறு
மங்காத வஞ்செழுத்தால் வந்த வாறும்
வகையுடனே யங்குலமோ தொண்ணூற் றாறு 
சிங்கார மானமனம் புத்தி சித்தம்
செங்கனலாற் கொண்டெழுந்த வாங்கா ரந்தான்
கங்கையணி சங்கரனா ரம்பி கைப்பெண்
கருத்தாலே யெடுத்திந்தக் காய மாண்டே. 

பாடல் எண்:- 27
கருதிரண்டு காயம தான வாறுங்
கருவியதி லேவளர்ந்து வெழுந்த வாறும்
உருதிரண்டு கால்கைகள் வகுத்த வாறு
முடம்புக்குள் சதைநிணங்கள் தரித்த வாறும்
திருவிருந்த மண்டபங்கள் சமைந்த வாறும்
சிறுபிள்ளை யாய்ப்புவியில் பிறந்த வாறும்
அருபியெனு நாதாக்கள் பாதம் போற்றி
யாதியிலே சாதிகுல முரைப்பே னாண்டே.

பாயிரம் முற்றிற்று. 

நூல் (தரு)
தந்தன தனதன னாதன தனதந்தனா தனாதனா - தன்னான. 

பாடல் எண்:- 28
மூலமு முதலறிந்து- சிவசிவ
முத்திதருஞ் சுழிமுனையறிந்து
பாவமுந் தாண்டியப்பால்- பரிபூரண
பானுமதியமர்ந்த பானமுண்டு
சீலமு நிறைந்துநின்ற- மூலமணி
திருமாலின்பொற்கமலச் செயலறிந்து
ஞாலமுங் கடந்துநின்ற- வுயர்குல
ஞானவெட்டி யானான்காணும். --தந். 

பாடல் எண்:- 29
நடுவணை தனிலேறி- சிவசிவ
நாடியகுண்டலி வட்டத்துள்ளே
அடிநடு முடியறிந்து- சுடரதில்
அனுதினம்வாசிகொண் டமிர்தமுண்டு
படியறிந் திசைநாதம்- சிவசிவ
பத்துமொரு மித்துவருபழக்கமதால்
வடிவுள்ளஜெகஜோதி- கமலமலர்
வந்துபணிந்தவ னான்காணும். --தந். 

பாடல் எண்:- 30
வீம்புகள் பேசுகிறீர்- சிவசிவ
வேடிக்கையா யின்பம்விளம்புகிறீர்
வேம்புகரும்பதுவாமோ- மகத்துகளின்
விற்பனத்தைக்கண்டறியா விழலென்கிறீர்
சாம்பசிவமூர்த்தியர்க்கே பட்டமது- ஸ்தாபித்த
சாம்புவனான்காணும்
தீம்புகளறவீசி- தெளிந்தவர்கள்
சீர்பாதங்கண்டவர்போல் தெரிசிக்கிறீர். --தந். 

பாடல் எண்:- 31
சபைதனிலுள்ளவர்கள்- ஆண்டையேகேள்
சாதியிலீன்னெனச் சாற்றுகிறீர்
உறுபயமில்லாமலும்- அகஞ்சுத்தி
யுடலறியாச்செபங்களோதுகிறீர்
வபையமதாகியநூல்கள்- வீண்பிலுக்கர்
வாசியறியாமலுமே மயங்குகிறீர்
ஔவையார்குலத்தில்வந்த வள்ளுவனெனும்
ஆதிபீடமு நான்காணும். --தந். 

பாடல் எண்:- 32
சிக்கிய நூல்பிணைப்பார்- சிவசிவ
சேணியசாதியி லுள்ளபடி
புக்கியநூலிழைக்கும்- பூதங்களில்
புரிந்தநூலிழைகளைப் பூட்டிவைப்பார்
தக்கியபறையெனவும்- சிவசிவ
சாதிகளில்முதல் சாதியெனு
முக்கிய நூல்பிணைக்கும்- மெய்ஞ்ஞான
மூர்த்திசாம்புவ னான்காணும். --தந். 

பாடல் எண்:- 33
அறுந்ததுநூல்பிணைக்கும்- சிவசிவ
அச்செனும்பாவதுகண்ட மட்டும்
சிறந்ததுநூல்பிணைக்கும்- சிவசிவ
சித்திரச்சாம்புவ னான்காணும்
பரந்தபஞ்சதுநூலா- இழைபிசகா
பறைநூலது பஞ்சவர்ணமதாய்
நிரந்தரவிசிதமெனும்- சிவசிவ
நிஷ்டைதனில்மிகுந்த நிர்மலன் நான். --தந். 

பாடல் எண்:- 34
ஆதியந்தமுங்கடந்து- ஆதாரமூலம்
அதுகடந்த பரவெளிதாண்டி
நீதியின் மறைவிளங்கும்- முப்பாழ்கடந்து
நின்றபரிபூரணத்தின் நிலைகடந்து
ஓதுமறைவேதமுந்தாண்டி- பிரகாசவொளி
ஓங்காரரீங்காசனத்தி லுறுதியதாய்ச்
சோதியின் நிலையில்நின்று- சுழிமுனையில்
துதித்துத்தொழுத சாம்புவன்காணும். --தந். 

பாடல் எண்:- 35
பூணநூல்பிறந்ததெங்கே- சிவசிவ
பின்குடுமையானதுவு மானதெங்கே
வானோர்கள் துதிப்பதெங்கே- மணிமந்திர
வாக்கியசெபதபங்கள் வாழ்க்கையெங்கே
கோனருள்புரிவதெங்கே- யாகசாலைக்
குருக்களாசாரியென்றுங் கூறுவதெங்கே
வீனிலேயோதுகின்ற- வேதியர்களே
வேதம்பிறந்திடமுஞ் சொல்வீர்காண். --தந். 

பாடல் எண்:- 36
ஒளிவெளிமதிதாண்டி- சிவசிவ
ஒன்பதுவாசலுங் கட்டறுத்து
தெளியவும்பொறிபுலனும்- சிக்கறுத்துச்
சிந்தையகற்றி மனதொருப்படுத்தி
பொழியவுமமிர்தரசம்- பொசிக்கவின்பம்
பூசிக்கப்பூசிக்க ஞானம்பூரணமதாய்ச்
சுழிதனிலெழுந்ததொரு- வாசியெனும்
சோதியைக்கண்டவனும் நான்காணும். --தந். 

பாடல் எண்:- 37
செத்ததோர்மாடெடுப்போம்- சிவசிவ
சுடுகாடனுதினங் காத்திருப்போம்
நித்தமுங்கடவுள்தனை- ரவியின்மதி
நேசமுடனேயுறுதி வாசஞ்செய்வோம்
சுத்தவீரசைவமுடன்- வாசிவாவெனும்
தோத்திரஞ்செய்தே பொசித்துக்காத்திருப்போம்
கர்த்தனையந்திசந்தி- உச்சமதிலும்
கருத்தினிலே நினைப்போ மாண்டேகேளீர். --தந்

பாடல் எண்:- 38
கட்டையுமடுக்கிக்கொள்வோம்- பிணமதற்கு
காற்பணமுழந்துண்டு வாங்கிக்கொள்வோம்
அட்டவிதப்பரீட்சைகளும்- ஆண்டைகேளீர்
அங்கசுத்திகளுஞ்செய்ய அடைவெடுப்போம்
சுட்டதொருஅஸ்திகளுமே- சேதம்வராமல்
துரிதமாய்ப்பொறுக்கியே சுட்டிடுவோம்
நட்டனை நடைநடப்போம்- ஆதியருள்
நாதனையனுதினமும் போற்றிசெய்வோம். --தந். 

பாடல் எண்:- 39
நால்வகையோனிதனில்- பிறந்துதித்த
நால்வேத ஞானமும்வந்துதித்ததுகாண்
கோலமிதையறியாமல்- உலகருமே
குருடர்கள் வேறுசெய்தினம்பிரிப்பார்
மாலப்பறையனென்றே- உலகர்கூடி
வாய்பிதற்றிவழக்குவா தாடுவர்காண்
பாலரறியாமலென்னைப்- பழித்துப்
பகடித்தனராண்டே கேளீர். --தந்.

பாடல் எண்:- 40
பூணநூல் தரித்துக்கொள்வோம்- சிவசிவ
பொறியுமைம்புலனையுந் தொழுதுகொள்வோம்
வேணவிருதுகளும்- விகிதமாய்
வெண்குடை வெண்சாமரமும் பிடித்துக்கொள்வோம்
வானவர்முனிவர்தொழும்- பொன்விசிறி
மரகதகுண்டலத்தின் கவசங்களும்
ஞானப்பிர காசவொளி- திவ்வியரச
நாதவிந்தர்ச்சனைகளில் நாம்துதிப்போம். --தந். 

பாடல் எண்:- 41
சாதியிலுயர்ந்தவர்காண்- நவரத்ன
சங்கப்பலகையின் மேலிருந்தவன்காண்
வேதியர்சாஸ்திரியர்- துதிசெய்யும்
விருதுபெற்றிடும் வீரசாம்புவன்காண்
பாதிமதிசடையணிந்தோன்- சிரசின்வளர்
பங்கயக்கங்கை யமிர்தச்செங்கைநதியில்
சுருதியின் பொற்கமலம்- மதிரவியின்
சூட்டிடுஞ்சாம்புவ னென்போன்காணும். --தந். 

பாடல் எண்:- 42
அந்தணர்வேதியர்கள்- என்குலத்தை
அசட்டுப்பறைய னென்றுதள்ளினர்காண்
சந்தியுஞ்சடங்கறுத்து- வள்ளுவனெனைச் 
சாம்பவமூர்த்தியென்றே தான்தொழுதார்
விந்துவுநாதமுங்கூடி- எங்கெங்குமேவும்
எண்பத்துனான் குயிர்க்குமேலதிகமாம்
வத்தவழிதனையறியார்- பிரமகுல
வங்கிஷவானென்றுமவர் போற்றிசெய்வார். --தந்

பாடல் எண்:- 43
வேதமுநான்காணும்- சிவசிவ
வேதாந்தசாரமு நான்காணும்
மாதவமுனிவர்க்கெல்லாம்- உயர்கின்ற
வள்ளுவசாம்புவ னான்காணும்
பேதாபேதங்களறிய- என்னூல்வகையில்
பிரட்டுருட்டுகளும் பிரித்துரைப்போம்
ஆதாரமூலமெல்லாம்- அசடில்லாமல்
அவனிதனிலுரைப்போ மாண்டேகேளீர். --தந். 

பாடல் எண்:- 44
சத்தியுநான்காணும்- சிவசிவ
சாம்பவமூர்த்தியெனு நான்காணும்
புத்தியிலதிதவன் காண்- சிவசிவ
புவனமதில்புகழ் திருவள்ளுவன் காண்
சித்தியிலதிதவன்காண்- சிவசிவ
சிங்காதனத்திலிருந் தெங்கெங்குமாய்
அத்திமுதலெறும்புகடை யாவர்களும்
அற்புதமெய்ஞ்ஞான வெட்டியாண்டே கேளீர். --தந். 

பாடல் எண்:- 45
வித்தையிலதிதமெந்தன்- விளங்குந்திரு
வேதாந்தசாரமுண்டு மேதினியில்வாழ்
எத்திசையெல்லாம்புகழும்- இரவிமதி
யேகாக்ஷரத்தைக்கண்டு சாகாமல்நான்
பத்தியில்முத்திதரும்- உலகமதில்
பறைநூலறிந்த சாம்புவன் காணும்
முத்தியுமெய்ஞ்ஞானநெறி- முக்கண்ணுடைய
மும்மூர்த்தியானவர்கள் தம்மூலத்தினால். --தந். 

பாடல் எண்:- 46
உதிரமுந்திரண்டதெங்கே- நாதமதி
லோடியேதான்விந்ததும் பாய்ந்ததெங்கே
மதியொளிரவியுமெங்கே- அமிர்தரச
வாரிதியுமான வரலாறுமெங்கே
சதிரமும்பிறந்ததெங்கே- உலகுதனில்
சாஸ்திரியாசாரிகளே தானுரைப்பீர்காண்
அதிதவேதங்களோதும்- சூரியசந்திரர் 
அறிவரிருந்தவர்க ளாண்மையுரைப்பீர். --தந். 

பாடல் எண்:- 47
கருவதுந்தரித்ததெங்கே- சிவசிவ
காயமாயுதித்தவந்தக் கருத்துமெங்கே
அருவுருவானதெங்கே- அண்டபிண்டங்க
ளாதியுமந்தமுங் கூடியமைந்ததெங்கே
உருவடி நடுவுமெங்கே- ஓங்காரமெனும்
உடலுயிரெ டுத்தவிதவுகமையெங்கே
மருவிய நால்வேதஞ்சொலும்- மதிகெட்ட
மாந்தர்களிதையறிந்து வகுத்துரைப்பீர். --தந். 

பாடல் எண்:- 48
தீர்த்தமுமாடிக்கொள்வீர்- தெளிந்தவர்போல்
செபதபசாஸ்திரங்க ளோதிக்கொள்வீர்
யாத்திரைதீர்த்தங்களாடி- நதிகள் தோறும்
அலைந்துஅலைந்துசுற்றி அலைகிறீர்
மாற்றியேபிறப்பமென்று- பொய்ப்பிரட்டு
வாய்சமத்துசாஸ்திரஞ் சொல்மடையர்களே
பாத்திராபாத்திரமறியா- பாவிகள் தான்
பாடுபட்டுங்கூறறியாமாடுகள் தான். --தந்

பாடல் எண்:- 49
அண்டபிண்டம்பிறந்ததெங்கே- சிவசிவ
அந்தணர்முனிவர்வந் துதித்ததெங்கே
பிண்டம்பலவுயிரும்வந்து- பிறந்தவகை
பிரபந்தமிதையறிந்து பேசுவீர்காண்
மண்டலமும்மண்டலஞ்சூழுங்- கதிர்மதியும்
வன்னியும்பிறந்ததெங்கே வானுமெங்கே
விண்டபொருளண்டருங்காணார்- வேதியர்களே
விஸ்வரூபமறிந்து விளக்குவீரே. --தந்

பாடல் எண்:- 50
சாஸ்திரம்பிறந்ததெங்கே- சிவசிவ
சாதியினால் வகைகளுமானதெங்கே
கோத்திரம்வகுத்ததெங்கே- சிவசிவ
குருவுடன்சீஷனும் வந்துதித்ததெங்கே
போற்றிடுஞ்சற்குருவுமெங்கே- பொய்க்குருவினால்
பூசையனுஷ்டான முறைப்பொருளுமெங்கே
சோற்றிலெய்துங்கல்லறியா- சுணங்கர்களே
சொர்னமலரென்னமய மன்னமலர்காண். --தந். 

பாடல் எண்:- 51
அண்டபிண்டபுவனத்துக்கும்- சந்திரனொளி
ஆதித்தவருருவு மானதெங்கே
சண்டப்பிரசண்டமதாய்- மந்திரமோதுஞ்
சவுங்கலேதானறியாய்ச் சாற்றிடுவீர்காண்
உண்டதோருணவறியார்- உவரசத்தின்
னுப்புவினுவரகற்றி யுண்டுமறியார்
கண்டபொருள்விண்டதறியார்- கல்லுப்புவந்த
காரணத்தைக்கண்டறியாக் கர்மிகளேகேள். --தந். 

பாடல் எண்:- 52
நாதவிந்துதானறிய- சிவசிவ
நடுவனைச்சுடரதுவுந் தாண்டியப்பால்
போதரவாயுடலெடுத்த தத்துவத்தின்
புதுமையைச் சொல்லுகிறேனாண்டேயே கேளீர் 
மாதர்கள்சையோனிதனிலும்- விந்துதித்த
மார்க்கமிடவாலெடுத்தவாறறிந்திடீர்
ஏதெனவென்றேவிளங்க- இப்புவிதனி
லிந்திரியமாதவிடா யினமதுகாண். --தந். 

பாடல் எண்:- 53
தந்தையுந்தாயுங்கூடி- இருவருஞ்
சருவியேரதிகேளியாடையிலே
விந்தையில்யான்பிறந்த- சரித்திரத்தை
விளம்புவேனாண்டேகேளிந்த மேதினிதனிலும்
உந்தியின்கமலமதி- லுதித்தவித
முற்பனமாகியதோர் கற்பனைசொல்வேன்
சந்தையங்கள் தீர்த்துவிடும்- மாதாபிதாவின்
சங்கைகளறியவிந்நூல் சாக்ஷியிதுகாண். --தந். 

பாடல் எண்:- 54 (விருத்தம்)
சோதிமதி சுடரொளியாய்த் தரித்த வாறுஞ்
சுடருருவாய் நாதவிந்து தோன்று மாறும்
நீதியில்லாப் பாழ்வீட்டி னிலைத்த வாறும்
நெல்லியதின் கனியதுபோல் திரண்ட வாறும்
கோதிலாக் கனியெனவே பழுத்த வாறுங்
குழவியெனப் புவிதனிலே பிறந்த வாறும்
ஆதியிலே கருவூரில் குடியி ருந்து
அறிவாலே புவியில்வந் தமைந்தே னாண்டே. 

பாடல் எண்:- 55
தன்னையினி தானறியார் தலமுங் காணார்
தான்பிறந்த சரித்திரமுந் தடமுங் காணார்
இன்னதென்று வேதமறை வழியுங் காணா
ரிடும்பரெல்லாம் வாய்மதத்தா லிகழ்ச்சி சொல்வார்
பின்னையொரு பொருளறியார் தவத்தைக் காணார்
பிதற்றுகின்ற பேயர்கள்தான் பெருமை பேசி
என்னைத்தான் பறையனென்று தள்ளி னார்க
ளென்பிறப்பைச் சபைதனிலே யியம்புவேனே. 

பாடல் எண்:- 56
தில்லையெனு மம்பலமாங் கமல பீடஞ்
சிறந்தவிந்து நாதமதில் செனித்த வாறும்
வல்லவர்கள் போற்றுந்திரு மண்ட பத்தில்
வழிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால்
சொல்லரிய முக்கோண வீடுந் தாண்டிச்
சோதிமதி நடுவணைமுப் பாழுந் தாண்டி
எல்லையெனு மூலமதில் நாத விந்து
இன்பமுட னுதித்தவகை யினிசொல் வேனே. 

பாடல் எண்:- 57
மடைதிறந்து நாதவிந்து வந்த வாறு
மாறியிரு கலைபிரிந்து வளர்ந்த வாறும்
திடமுடனே பதின்மூன்றாம் கோட்டின் மேலுஞ்
செங்கநதி போலவும்வந் துதித்த வாறும்
உடலெடுத்து ஆவியதி லுதித்த வாறு
மூமையென்ற வெழுத்ததனி லியர்ந்த வாறும்
இடைநடுவே யெனைப்பறைய னென்ற வாறு
மென்னுடலே யெடுத்தவகை யினஞ்சொல் வேனே. 

பாடல் எண்:- 58
ஆதியிலே கருவூரு நாட்டுக் குள்ளே
அம்பரமாஞ் சிற்பரத்துப் பெரும்பா ழுள்ளே
வீதியிலே சிறந்தசிவ நாத விந்து
வெளிகடந்து வாயிரத்தெட் டிதழிற் பொங்கி
சோதியிலுஞ் சுழிமுனையாய் தோய்ந்த பின்பு
சுக்கிலமுஞ் சுரோணிதத்தா லெடுத்த பாண்டம்
சாதியிலு மெனைப்பறைய னென்றே சொல்லுஞ்
சண்டாளர்க் கிந்நூலைச் சாற்று வேனே. 

பாடல் எண்:- 59
கால்கரமும் பாதமுத லான வாறுங்
கணுவிரலு நகஞ்சதையுந் தரித்த வாறும்
விலாக்கொடிதா னெலும்புநிணம் வகுத்த வாறு
மிரதமொடு மார்புகழுத் தான வாறுந்
தோலான துடைவயிறு தொக்கின் வாறுந்
தொகுத்தநரம் பதுவுஞ்சடஞ் சூட்டு மாறும்
மாலான மாதர்கருக் குழியிற் சேர்ந்த
வயணமிதை யின்னதென்று வகுப்பே னாண்டே. 

பாடல் எண்:- 60
நாடிநரம் பதுவுதிரம் நயந்த வாறும்
நலமான தசவாய்வுசெனித்த வாறும்
நீடியதோ ரெலும்புகளு நிகழ்ந்த வாறும்
நிலையான கருவியெல்லாந் தனித்த வாறும்
கூடியதோர் குய்யம்வந் துதித்த வாறும்
குறிப்பறிய பஞ்சகர்த்தாள் குடில வாறும்
குடியதோர் மார்புகண்கள் வந்த வாறுஞ்
சொல்லுகிறேன் விபரமினி யாண்டே கேளே.

பாடல் எண்:- 61
சிறுகுடலுந் தொந்திவயி றான வாறுஞ்
சிறந்தபொறி யதிற்கலந்து நின்ற வாறும்
பெருங்குடலு மொருபுறமாய்ப் பிரிந்த வாறும்
பேர்பெரிய வீரல்குலை சமைந்த வாறும்
மறுமடலா யீரல்நுரை யிரண்டுங் கூடி
வளர்ந்ததுவுஞ் சாதகமாய் மகிழ்ந்த வாறும்
உருவுடனே செவிநாசி யுதடு நாக்கு
வுகமையுட னெடுத்தவகை யுரைப்பே னாண்டே. 

( த ரு )
தந்தன தன தனனா-தான தன
தந்தன தன தன-தான தனனா. 

பாடல் எண்:- 62
தந்தையுடனேயெனது- தாயுமிருவர்
சரசவுல்லாசலீலை- யாடையிலே
மந்திரமதாகவிந்து- நாதமுங்கூடி
வருகிறவழிசொல்வே னாண்டேயிதுகாண்
இந்திரியசாதிலிங்க முலகுக்கெல்லா
மேகபர நாதவிந்து யாகமதாகி
வந்தவிதங்கோ சபீச- பிரபஞ்சமதாய்
வாய்த்தவிதமுலகில் வகுத்தனர்காண். --தந். 

பாடல் எண்:- 63
ஆவிடையார்கோவிலிலே- யமைத்தகுறி
ஆதரவாகவேசேர்ந்து மாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து- வெகுவிசித
விற்பனையறியவொரு கற்பனைசொல்வேன்
பாவிகளிதையறியார்- கல்லுகள் தனில்
பாவனையொப்பாகவுமே தாவிதஞ்செய்தார் 
ஆவியென்றுமறியாமல்- செலவழிய
ஆத்துமலிங்கமதனை பார்த்துணராமல். --தந்.

பாடல் எண்:- 64
வன்னியும்வாயுவுங்கூடி உயர்கின்ற
மண்டபமார்க்கத்தின் வீதிதனிலே
உன்னதமாய் நாதவிந்து- உறவாடியுமே
ஒருவழியாகவந் துதித்ததுகாண்
முன்னிலையாய்ச்சுடரதனில்- மூலவன்னி
முப்பொருளுஞ்சேர்ந்துவொரு வுற்பனமதாய்ச்
சென்னிதனில்வளரியல்பாம்- நாதமெனுஞ்
சித்திரபூஞ்சாவடியில் மத்திபத்திலே. --தந். 

பாடல் எண்:- 65
வருகிறவழியதனில்- நவரத்ன
மண்டபத்துக்குள்ள வச்சிரப்பையதனில்
பெருகிய நாதமது- சதாசிவத்தின்
பிரணவமூலப்பிரகாசப் பேரொளியினில்
உருவியமலர்க்கமலம்- போற்றியருள்
உற்பனமருள் தருங் கற்பகத்தில்வாழ்
அருள்வந்தெய்திடினுந் திருவடியதின்
அனுதினம்பூசித்து மிகவடிபணிந்தேன். --தந். 

பாடல் எண்:- 66
போற்றியமண்டலம்விட்டு மறையவர்தன்
புகழுஞ்சிங்காரமெனும் புரவிவிட்டு
சாற்றியமயேஸ்பரத்தில்- சம்பிரமத்துடன்
சத்திரத்தில்வந்து சித்திரசாவடியினில்
காத்திருந்தேன் திருநடனம்- ரத்னமணி
கனகசபையைக்கண்டு நான்மகிழ்ந்தேன்
பூத்தசெங்கமலமலர்- இங்கிதநாதப்
பொக்கிஷத்தைக் கண்டறிந்துயான் மகிழ்ந்தேன் காண். --தந். 

பாடல் எண்:- 67
தெண்டனிட்டுமண்டபம்விட்டுக்- கருவூர்தனில்
சித்திரப்பூஞ்சாவடிதன் முகப்பும்விட்டு
தொண்டர்கள்பணி ருத்திரன்- திருவடியைத்
தொழுதனுதினம்பணிந்து துதித்துநின்றேன்
அண்டர்கள் போற்றுகின்ற- பிரகாசவொளி
அவ்விடத்திலேமனதை யடக்கியேகாண்
கண்டுகளிகூர்ந்துமிக- மதியின்மலர்
கங்கையத்தின் பங்கயக்கண் சிங்காதனத்தில். --தந்.  

பாடல் எண்:- 68
நின்றுபதியம்பரம்விட்டு- நிலைபிசகா
நினைவுக்கரியதொரு பொறிகடந்து
வேண்டியவரமருளும்- திருமால்திரு
மெல்லடி பணிந்து பதம்வணங்கியபின்
சென்றுமூலவாசியைக்கொண்டு- இராஜயோகந்
தேவப்பிரகாசமூல கேசரத்தில்யான்
ஒன்றாதவநெறிபிசகா- ரேசிக்கவிருள்
ஓடியேமூலாக்கினி நாடிவணங்க. --தந். 

பாடல் எண்:- 69
வணங்கியப்பதிகடந்து- திருநடன
மாடியகூத்தனுஞ் சபையதுகடந்து
இணங்கியபிர்மருத்திரன்- கமலமலர்
இணையடிதொழுதுமே யான்பணிந்தேன்
குணமவரதிசயமா- மென்னாலுரைக்கக்
கூடுமோகோடானுகோடி மேடானமேட்டி
மணம்விசிதமலர்பொழிய- மதிரவியின்
மாமதுரபூபதிகோமயங்காமல். --தந். 

பாடல் எண்:- 70
கொண்டபதிமண்டபம்விட்டுக்- கருவிகளின்
கூடியதிருமுகப்பூஞ் சோலையிலே
அண்டர்களருள்போற்றுங்- கணபதியின்
அடியினருள்துதித்து அடியில்வந்தேன்
குண்டலிகமலமலர்- மேன்மேலவர் தன்
கோபுர சித்திரமதிலின் வாசல்விட்டு
மண்டலஞ்சூழுங்கதிர்- வலமிடைபின்
மலரடிதொழுதுயான் வணங்கிவந்தேன். --தந். 

பாடல் எண்:- 71
வந்துதிருமூலத்திலும்- பானுவிருக்கும்
வச்சிரவளர்சதுஷ்கோண வாசலிலுஞ்
சுந்தரவிந்ததிலும்வந்து- சினேகமது
சோதித்துக்கலந்துற வாடிக்கொண்டே
இந்திரபதவிகளெனவே- என்னாண்டையேகேள்
இங்கிதநாதசங்கித மங்களமதாய்ச்
சந்திரபுட்கரணிவரும்- நந்திப்பிரகாசந்
தாரையதுவேமுழங்குஞ் சாரையைக்கண்டேன். --தந். 

பாடல் எண்:- 72
தூண்டியே நாதபரி- பூரணத்தின்
சுகந்தமலர்க்கமலந் துதித்துக்கொண்டேன்
பூண்டுபொற்பதம் பணிந்தேன்- என்னாண்டையேகேள்
பூரகத்தினிலும்வந்து போற்றிசெய்தேன்
வேண்டியமதிமலர்கொண்- டாராதனைகள்
மிகுத்தவம்பிகையோமம் விதரணையாய்க்
காண்டிபமென்றாலறிய- வாசியைக்கொண்டு
கருத்திலிருத்திக்கண்ட தாரையூதினேனே. --தந். 

பாடல் எண்:- 73
வந்துதச நாதவிந்து- சுழிமுனையின்
வாசலின்கருக்குழிதன் வீட்டுக்குள்ளே
தந்திரமதாகவேதான்- கருவதனில்
சங்கற்பமில்லாமல் கலந்துறைந்ததுகாண்
விந்தையெனு நாதவிந்து- சையோகந்தனில்
விற்பனம்போலவுமெய்து முற்பனமதாய்ச்
சுந்தரசுக்கிலசுரோணித- மிரண்டுங்கூடிச்
சொப்பனம்போலுமுதித்த சூக்ஷமிதுகாண். --தந். 

(வெண்பா)
பாடல் எண்:- 74 
உள்ளொளியாஞ் செந்தணலிலுற்பனமாஞ் சொப்பனத்தில்
வள்ள லெனுநாத விந்துகாண்- தெள்ளியதோர்
கத்தரிக்கோல் மாறல் கனக சபைவீட்டில்
வித்தாய் முளைத்ததுகாண் விந்து. 

பாடல் எண்:- 75
நகாரம காரமுட னாடுசிங் காரமதாய்
வகாரமிரு காலாய் வளர்ந்ததுகாண்- யகாரமது
அஞ்சறி வாய்நின்ற பஞ்சப் பெரும்பூத
மஞ்சும் வளர்ந்ததுகா ணாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 76
ஓராறு மேலாறு முற்றபெருந் துறைதாண்டி
சீரார் புகழவருந் தெய்வப் பதிதாண்டிக்
காரார் மதகளிறு கன்னித் திருவீட்டில்
பேராய்க் கருவுதித்துப் பேசி யிருந்தேன்காண். 

பாடல் எண்:- 77
ஆதிக் கருவூரி லங்கே குடியிருந்து
நீதியந்த நாட்டில்வந்து நெஞ்சறிந்து நேசமதாய்ச்
சாதிகுலந் தவிர்ந்து தலமுஞ்சுழி வீடுவிட்டுச்
சோதிமதி நின்றிலங்குஞ் சுடர்வீட்டில் வந்திருந்தே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 78
விந்தெனவு நாதம்வந்த வாறுஞ் சொன்னேன்
வெளிகடந்து வந்தவகை விபரஞ் சொன்னேன்
அந்தவிடை பிங்கலையில் மாறல் சொன்னே
னதுகடந்து சுழிமுனையை யறியச் சொன்னேன்
விந்தைமய லாசையது வொழியச் சொன்னேன்
விட்டகுறை தொட்டகுறை விபரஞ் சொன்னேன்
அந்ததிசை யதிசயமு மகற்றச் சொன்னே
னருள்சொன்னேன் பொருள் சொன்னே னறிவுள்ளோர்க்கே. 

பாடல் எண்:- 79
ஓங்கார சத்தமுதித் துணர்ந்து நிற்கு
முன்னியதோர் நகாரமதும் வளர்ந்து நிற்கும்
நீங்காத லகாரமது முயர்ந்து நிற்கு
நிலையான சிகாரமது மேலே நிற்கும்
பாங்கான அகாரமதைக் காத்து நிற்கும்
பதிவான வுகாரமது மேலே நிற்கும்
ஆங்கார மானவஞ்சு பஞ்ச பூத
மப்படியே யஞ்சுருவா யாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 80
சத்தமது பிருதிவி மேலே நிற்குந்
தாங்கிநின்ற பரிசமது வப்பு மேலாம்
பத்திதரும் ரூபமது சிகார மேலாம்
பாங்கான ரசமதுவும் வகார மேலாம்
சித்தமகிழ்ந் ததுவுமொரு யகார மேலாஞ்
சீர்பெறவே காயமெனுந் திரண்டே யாச்சு
வெற்றிதருங் கவியொரு தொண்ணூற் றாறு
விரைந்துறைந்தே யுதிரமதில் பிறந்த தாண்டே. 

பாடல் எண்:- 81
நட்டுவைத்த வெலும்புகால் துண்டு நாலு
நலமான கையெலும்பு துண்டு நாலு
ஒட்டிவைத்த பழுவெலும்பு முப்பத் திரண்டு
வுன்னதமாந் தண்டுபதி னாறு கண்டம்
நட்டுவைத்த வெலும்புமுச்சா ணதற்கு மேலே
வளமான நுறுக்கெலும்பு வாயி ரந்தான்
சுட்டலைந்த பாண்டமீ தெடுத்த நேர்மை
தொகையெல்லாஞ் சபைதனிலே சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 82
வீறான கையெலும்பு பிருதிவியின் கூறாம்
விதமான வுண்ணீரு பிரமன் கூறாம்
பேறான தசநாடி வாய்வு பத்தும்
பலமான நரம்பெல்லா மாலின் கூறாம்
கூறான வுதிரமெல்லாஞ் சத்தி கூறாங்
கூடி நின்ற வெலும்பெல்லாம் ருத்ரன் கூறாம்
சீரான நிணத்தோடு மச்சை சவ்வுஞ்
சிறந்தருளு மயேஸ்பரத்தின் கூறா மாண்டே. 

பாடல் எண்:- 83
ஆதார மானபர நாத விந்து
வாதிசதா சிவன் கூறா மாண்டே கேளீர் 
பாதார முடியளவும் கணக்கதாகப்
பாலித்து விபரமதாய்ப் பகர யானும்
வேதாக மத்தில்நின்று நடனஞ் செய்யும்
விந்துநாதத் தின்செயல் விபரமாக
நாதாக்கள் கமலபதந் துதித்து யானு
நவிலவுமே யான்கண்ட நடத்தை யாண்டே. 

பாடல் எண்:- 84
முத்திதரு மூலத்தி லக்ஷரமே நாலு
முதலான சுவாதிஷ்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தும் பத்து
பாங்கான வனாகதத்தி லெழுத்தீ ராறாம்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாஞ்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாகச்
சார்வாகு மைம்பத்தோ ரக்ஷரங்கா ளாண்டே. 

பாடல் எண்:- 85
மும்மலமுந் தரித்தவொரு வாச லொன்று
முடிகாணா லிங்கமொரு வாச லொன்று
நன்மையறு சுவையறிந்த வாச லொன்று 
நலமான கேள்விகொண்ட வாச லொன்று 
வன்மையுள்ள வாசமறி வாசல் ரெண்டு
வளமான ரூபமறி வாசல் ரெண்டு
அன்னமெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
யறிவாலே யெடுத்ததிந்தக் காய மாண்டே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 86
வட்டமதி லேறிவளர் மாமதியைத் தாண்டியொரு
திட்டவளை போட்டுநவ சித்திரமணி வாசலிலே
முட்டிநின்ற கம்பமுனை முதற்சுழி வீட்டினிலே
ஒட்டியது வளர்ந்து வொருமலராப் பூத்ததுகாண். 

பாடல் எண்:- 87
பூவிருக்கப் பிஞ்சாகிப் பூவிலரும் பாகியுமே
மாவிருக்கத் தேனாகி வந்து சிறுவீட்டில்
மேவிருக்க வம்பரத்தே வேரோடித் தூறாகி
யாருவருக்கு மிங்கிதமா யரும்பாகி நின்றதுகாண். 

( வெண்பா )
பாடல் எண்:- 88
வடிவுகொண்ட வள்ளையுமாய் மந்திரஞ்சேர் நாதமுமாய்
முடிவுகண்டு மூல முளைத்ததுகாண்- வடிவதுவாய்க்
கால்வாங்கி வட்டமிட்டுக் கனகத் திருவீட்டில்
மேல்வாங்கி நின்றதுகாண் விந்து. 

( விருத்தம் )
பாடல் எண்:- 89
மாலயனும் பிரகாச மதிய தாகும்
வாழும்வளர் ருத்திரனு முருவ தாகும்
சேலான மயேஸ்வரனு முணுர்வ தாகுஞ்
செப்பரிய சதாசிவனுங் குருவ தாகும்
காலான நாடியொரு கைகா லாகுங்
கதிர்மதியால் வளர்ந்தசத்தி கருவதாகும்
மேலான விழிமடவா ளுந்திக் குள்ளே
விளைகின்ற கருவியெல்லாம் விதிப்பே னாண்டே. 

பாடல் எண்:- 90
எட்டுத்தூ ணாட்டியொரு விட்டம் போட்டு 
வெழுந்ததின்மே லருகுவளை யொன்றாய்க் கூட்டி
மட்டற்ற மோட்டின்வளை யொன்று நாட்டி
வளமான துண்டும்வளை ரெண்டும் போட்டுக்
கட்டாகக் கையகத்தில் வளைத்துக் கொண்டு
கனமான வரிச்சல்விலாக் கொடியு மாக்கீ
முட்டமுட்ட நின்றகம் பத்து மேலாய் 
முகப்புடனே சிங்கார வீடு மாச்சே. 

பாடல் எண்:- 91
பத்தியுடன் விரலுமிரு பதுவே யாச்சு
பதிந்தநக மதுவுமப் படியே யாச்சு
வெற்றியுள்ள ரோமமது மனேக மாச்சு
விதமான வீடுமெண்சா ணதுவே யாச்சு
அத்திபுர மதுவாச்சு வெளியு மாச்சு
வங்குலமுந் தொண்ணூற்றா றதிலே யாச்சு
சத்திவா லாம்பிகைப்பெண் ணாலே யாச்சு 
சார்வான கருவியெல்லா மமைந்த தாண்டே. 

( வெண்பா )
பாடல் எண்:- 92
அங்குலமுந் தத்துவமு மதிலே வளர்ந்தவகை
இங்கிதமா யானுரைப்பே னீசனே- எங்கள்குலம்
மந்துதந்த மூலம் வளர்ந்தவுயிர் போம்பொழுது
வெந்துதந்த மூல வெளி. 

( கலித்துறை )
பாடல் எண்:- 93
கதிரே சிறந்து கார்கொண்ட வட்டக் கனகிரிமேல்
மதுரம் பொழிந்து வழியே நடந்துயர் வாசலிலே
உதிரந் திரண்டுவுடலாகி யேவந்த வுண்மையெல்லாம்
சதிரம் பிறந்த விபரஞ்ச பைநின்று சாற்றுவனே. 

பாடல் எண்:- 94
நாடித் திரிந்துயர் நாதாந்த விந்துள நாட்டத்திலே
கூடிக் கலைந்து விருகாலை வாங்கிக் கொடிமுடிமேல்
ஆடித் திரிந்து வளவற்று நின்ற வறையதுக்கு
ளோடிக் கலந்து வொருமல ராகி யுதித்ததுவே. 

( விருத்தம் )
பாடல் எண்:- 95
நாற்சதுர மேலும்வளர் கணேச னுக்கு
நல்லருளைத் தந்தருளும் பிரமா வுக்கும்
பாற்கடலிற் பள்ளிக்கொண்ட திருமா லுக்கும்
பன்னிரண்டின் மேலுநின்ற ருத்தி ரற்கும்
மேற்சதுர மானமயேஸ் பரனா ருக்கும்
விந்துவதி னின்றிலங்குஞ் சதாசி வற்கும்
தீர்க்கமுட னவரவர்க்குக் கட்டும் வீடு
செப்புகிறேன் ஜெகச்சோதி செயல்தா னாண்டே. 

பாடல் எண்:- 96
நாதமென்றுஞ் செகமெல்லா நின்ற நாத
நல்வினையுந் தீவினையு மாண்ட மூர்த்தி 
வேதமென்ற கடலுக்கு மெட்டா நின்ற
வெளிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால்
பாதமடி முடியாகி நின்ற சோதி
பதினாலு லோகமதுக் கொருவ னான
சூதமது வானதிரு மூலந் தன்னில்
சுரூபமாய் நின்றவகை சொல்வே னாண்டே. 

( தரு )
பாடல் எண்:- 97
வீடுகட்டிக்கொண்டேன் நானொரு- வீடுகட்டிக்கொண்டேன்
வீடுகட்டினேன் விண்ணோடுமண்ணையுங் கூறதாச்சுக் குறியிது
ரெண்டினால் பாடுபட்டுச்சலத்தைத் தெளித்துடன்
பற்றிநெருப்பை யுங்காற்றையுஞ் சேர்த்துமே
கூடுண்டான குறிமண்ணுந் தண்ணீருங்
கூட்டிப்பி சைந்துறவாடி யந்தமுடன்
நீடுலகும்புக ழாவியதுக்குள் எண்சாணுடல்
நேர்த்தியைப் பார்த்திரும்- வீடு. 

பாடல் எண்:- 98
தச்சமுழங் கொண்டிரு காலை நாட்டிச்
சதிராக வட்டப் பலகையுஞ் சேர்த்து
உச்சிதமாக வொருமர நாட்டியே
உள்ளே பழுவரிச்சல்களுங் கோத்துடன்
முச்சுடர் வன்னிக்குழை யொன்று நாட்டியே
முட்டுத்துண்டு முனையது வாகிப்பின்
மச்சூடுகட்ட வகையறி யாதாண்டே
மகிழ்ந்துட னாதாரவாசியைக் கொண்டுமே- வீடு. 

பாடல் எண்:- 99
ஒட்டுப்பலகையு முட்டுபலகையும்
ஓங்கியசிங்கார மோட்டுவளையுடன்
வட்டத்திருகாணி விட்டத்தின்மேல்நின்று 
மாயாமல்கைமரஞ் சாயாமல்நாட்டியே
முட்டுக்கால்வட்ட முக்காணியைப்பூட்டி
முறியாமல்தச்சு முயற்சியதாகவும்
நட்டுக்காலாணிகள் முட்டியேதாங்கிட
நாதவிந்தாலும் வேதாந்தவீடாச்சுது- வீடு. 

பாடல் எண்:- 100
கைமர நாலுகணக்காகச் சேர்த்துக்
காலாணிகொண்டு மேலாணிபூட்டியே
மெய்யுறவாகும்போதிக் கைரெண்டூட்டி
வேடிக்கைநாலு கொடியுந்திருப்பியே
துய்யநடுமூலக் கம்பமதாகிய
சூக்ஷக்கால்நாட்டிச் சுகாதீதமாகவும்
மையத்திலேசுருள் மேருவைக்கூட்டிப்பின்
வச்சிரப்பலகை ரெண்டச்சுழல்மூட்டியே- வீடு. 

பாடல் எண்:- 101
நகாரமகார மிரண்டையுஞ்சேர்த்து
நடுவேசதுஷ்கோண வீட்டையுங்கட்டி
சிகாரவகார யகாரமதுகொண்டு
சித்திரச்சாவடி விஸ்தாரமாகவும்
அகாரமதுக்குள்ளே யையுமென்றட்சரம்
அவ்வெழுத்தாலே யகண்டசராசரம்
உகாரமதுக்கு ளுயர்ந்தகிலியெனும்
உவ்வெழுத்தாலு முதித்தசவ்வானதும்- வீடு. 

பாடல் எண்:- 102
வஞ்சகமான தோராஞ்சுபெரும்பூதம்
பஞ்சறிவாகவுங் குஞ்சரவீட்டினில்
அஞ்செழுத்துள் வளரைம்பத்தோரட்சரம்
ஆனந்தமாக வலங்காரமாளிகை
கொஞ்சிவிளையாடும் ரஞ்சிதவீட்டினில்
நெஞ்சறியுங்கமலாலயமைம் பொறி
செஞ்சொல்மொழிசிவசிங்கா தனத்தினில்
கஞசமலராயிரத் தெட்டிதழினால்- வீடு. 

பாடல் எண்:- 103
நாலுமுழத்தினுங்காலை வளர்த்தியே
நாட்டியேசக்கரம் பூட்டியேவைத்துடன்
மேலுமீரைந்துடன் தாதுவினாடியால்
வீட்டுக்குஆக்கையைப் பூட்டிவருந்தியே
மாலுநடுவனை காலுமடியனும்
பாலுமதிவளர் மேலுஞ்சுடரினால்
மூலவன்னிச்சுழி மூவரிருப்பிடம்
வாலைகுண்டலிதன் மாளிகையாச்சுது- வீடு. 

பாடல் எண்:- 104
நாடித்தசவாய்வு வீரைந்துஞ்சேர்த்துமே
நாடியஷ்டதிசையு நலமாகப்பூட்டியே
வீட்டுக்குவாசலொன்பதுவு முண்டாக்கியே 
வேடிக்கையாகவுநாடி நரம்பாலே
காட்டியசுக்கில சுரோணிதத்தாலே
கருவியெனுங்கரணாதிகள் சூழ்ந்திடில்
ஆட்டியமுட்டுமுடக்குக் கணுவுக
ளாக்கைப்பலப்பட நாக்குவுண்ணாக்குடன்- வீடு. 

பாடல் எண்:- 105
சிங்காரமான வரண்மனையஞ்சையும்
சிற்றம்பலத்துடன் பேரம்பலங்களும்
கங்கைநதிகளுந் தொண்ணூற்றறுவர்
கலந்தேயிருக்குங் கனகசபையெனும்
அங்கங்குறைவுபடாம லரண்மனை
அச்சூடுகட்டியே மச்சூடுஆலயம்
எங்கும்பிரகாசிக்கும் மிந்திரியவீடு
இடைபிங்கலைசுழியேகா க்ஷரத்தினால்- வீடு. 

பாடல் எண்:- 106
ஐந்துபுலனையறிவாகக் கூட்டியே
ஆதாரமாறும்வளை தனை நாட்டியே
கைந்துமதசுழி கற்பத்தையூட்டியே
கால்கொண்டுநின்றொரு மேல்கொண்டுவாங்கியே
பைந்தமிழ்சூஸ்திர நாடித்திசைக்கயிறு
பாங்குடன் கப்பிக்கயிறுமூன்றும் பூட்ட
ஐந்துபூதத்தைக் கொண்டாக்கைபிலப்பட
ஆறூருண்டாக்கியனேக விசிதமாம்- வீடு. 

பாடல் எண்:- 107
சுற்றுமதில்களுமா றற்சுவருடன்
துண்டுகளாகிய தண்டிகைக்கம்புகள்
பத்தியால்நின்றதோர் சித்திரச்சாவடி
பார்க்கிறபேர்க்கெலாஞ் சீர்க்கலங்காரமாய்
முத்திதருஞ் சிவசித்திரமண்டப
மோட்டுவளையு நரம்பாவிறுக்கியே
சத்தமெனுநவரத்நக் கதவுடன்
சந்நிதிவாசலிலுன்ன தமாகவே- வீடு. 

பாடல் எண்:- 108
நவ்வையுமவ்வையும் ரெண்டையுஞ்சேர்த்து
நலமான அவ்வையும்வவ்வையுங் கூட்டியே 
சிவ்வையுஞ்சேர்த்துடனா சாரிகையில்
திடமாயெண் சாணுடல்தேகமதாகவே
அவ்வதுக்குள்ளே யாதாரமுண்டாச்சுது
அம்பிகைப்பெண்ணவளாலே வீடாச்சுது
உவ்வதுக்குள்ளே யுடலுமுண்டாச்சுது
ஓங்காரத்துள்ளே யுயிர்வந்துலாவுது- வீடு. 

பாடல் எண்:- 109
திங்களொன்றானபின் மூங்கின் முளைபோல்
திரண்டுருண்டே கனியாகுங்கருவுரு
சிங்காரமானதோர் திங்களிரண்டினில்
சேர்ந்துகலந்தது பாலாடைபோலவும்
இங்கிதசுக்லசுரோணிதமாகிய
இந்திரியவச்சிரவின் பவீடாமதில்
தங்கியநாதவிந்தாலே சமைந்த
சடமதின்வாறினைச் சாற்றுவனாண்டேகேள்- வீடு. 

( விருத்தம் )
பாடல் எண்:- 110
மூலமதில் வீடொன்று முடிந்த தாண்டே
முச்சந்தி வீதியதும் புறம்பாய் வைத்து
சீலமுள்ள பிரமனுக்கும் வீடொன் றாச்சு
சிறந்தருளுந் திருமால்தன் வீடொன் றாச்சு
ஞாலமதில் ருத்திரன்வீ டொன்றே யாச்சு
நலமான மயேஸ்பரன்தன் வீடொன் றாச்சு
ஆலவிட முண்ட சதா சிவனா ருக்கும்
அரண்மனையு மொன்றாச்சு ஆண்டே கேளே. 

பாடல் எண்:- 111
மருவுயர்ந்த வதனத்தி னாத சத்தி
வடிவான மரகதப்பெண் மாது வாலை
திரிபுரத்துக் கொருபுறமா யிலகுஞ் சோதி
சிற்பரத்தி தற்பரத்தி சிறுபெண் ணாத்தாள்
சுரிமுகத்தி னகதனத்தி துடியி டைச்சி
துலங்கும்ரத்ன மானதொரு சோதி மாது
அருமறைச்சி யம்பரத்தி யம்பி கைக்கு
அரண்மனையு மண்டபமுஞ் சமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 112
குருவுடனே சீஷனுந்தான் வாழ்ந்த வீடு
கூறான விந்திரியந் தரித்த வீடு
அரூபியெனு நாதாக்கள் துதிக்கும் வீடு
அளவற்ற வைம்பூதம் வாழ்ந்த வீடு
பருவமெனும் ஞானசிவசத்தி வீடு
பண்ணுமறைக் கெட்டாத நாத வீடு
கருவிருந்த ஞானவிந் திரிய வீடு
கட்டிவைத்தான் திருமால்தன் கயிற்றா லாண்டே. 

பாடல் எண்:- 113
அடிநடுவு முடியுமொரு வெண்சா ணீளம்
அங்குலமுந் தொண்ணூற்றா றாண்டே கேளிர்
கொடியமகா மேருவெனும் வளர்ந்த வீட்டில்
குடிலமங்கு லத்துக்கோர் கருவி யாகும்
படியான பதினெட்டாங் கோட்டின் மேலும்
பலபலவாய்க் கருவிகளு மமைத்த தாகில்
முடிசிறந்த ஜெகநாத ரருளி னாலே
முடிந்ததுகாண் பெரும்பரத்தி வீடு மாண்டே. 

பாடல் எண்:- 114
சரியையுடன் கிரியைசிவ யோக ஞானந்
தன்னையினிச் செய்திருக்கு மாத்தாள் வீடு
வரிசைதந்து விளையாடு மாதி வீடு
வளமான கருவியெல்லாம் வளர்த்த வீடு
பெரியநரம் பெழுபத்தீ ராயி ரத்தில்
பெருநாடி பெலத்தநரம் பான தாலே
பரிபூர்ண வம்பிகைப்பெண் ணிருந்த வீடு
பாகமதா யமைத்துமுடிந் தாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 115
ஒன்றிரண்டு திங்களில் கருவு மூறி
யொருமூன்று திங்களில் ரூப மாகிக்
கன்றுசது ரஞ்சுவிரு மூன்றில் தானுங்
கருத்துடனே யிடைநாசி மார்பு மாகி
என்றுரைத்த வேழுதிங்க ளெட்டுக் குள்ளே 
யெண்ணரிய நாதவிந்து வுருவே யாச்சு
அண்டபிண்ட மகண்டமதா யமைந்து மேலு
மலங்கார வீடாகச் சமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 116
ஆக்கையெனும் தசநாடி நரம்பி னாலே
யடி நடுவு முடியுமா தார மாசித்
தீர்க்கமுள்ள யோனிசித்திர மதிலும் வீடுஞ்
சிவசமயத்தினருளாலே யமைத்த வாறு
மேற்கயினி யுளுத்ததொரு வுப்புப் பாண்ட
மிப்படியே சடமதுவால் வீடு மாச்சு
பார்க்கவொரு சிங்கார விசித மாகும்
பன்னிரெண்டாங் கோட்டில்வந்து பதிந்ததாண்டே. 

பாடல் எண்:- 117
நாலாச்சு ஆறாச்சு வீரைஞ் சாச்சு
நலமான வீராறு மீரெட் டாச்சு
மேலான விரண்டாச்சு இதுக்கப் பாலும்
வெளிகடந்து வொன்றாச்சு வுருவு மாச்சு
காலாச்சு கையாச்சு வயிறு மாச்சு
கட்டியொரு வீடாகச் சமைந்த வாறும்
சீலமுள்ள சிங்கார விசித வீட்டில் 
சித்திரத்தின் பதுமையைப்போற் செனித்த தாண்டே. 

ஆறாதாரவகை இந்திரிய விவரம். 
 ( தரு )
அடையாளஞ்சொல்லுகிறேன்- ஆண்டையேகேளீர் 
அடையாளஞ்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 118
பிருதிவியப்புவுந் தேயுடன்வாயும்
பேரானவாகாச மைந்ததையும்கூட்டிக்
கருத்தில்வளருஞ் சுழிமுனைவீட்டினில்
கண்டுபுறமாக நின்றதுஆண்டையே
நிருவிகமலத்திதழாயிரத்தெட்டு
நிர்க்குண நிர்மலநேர்மையிதாகையால்
மருமலர்சூழ்திருமாலின் பதிவளர்
மாமதுரக்கனி வாழ்க்கையுமிப்படி- அடை. 

பாடல் எண்:- 119
தோத்திரமாவது வாக்குடன்சட்சுவுஞ்
சிங்குவையாக்கிராண மைந்தையுங்கூட்டிப்
பாத்திரமான செவியுமுடம்புகள்
பாங்கான நாக்கதுமூக்குமேயாச்சுது
சத்தபரிசமும்ரூப ரசகெந்தஞ்
சார்வாகுமீதொரு வைந்துமேயாச்சுது
சித்தமுங்கேள்வி சுகதுக்கரூபங்கள்
சேர்ந்த வறுசுவைநாவதுமேருசி- அடை. 

பாடல் எண்:- 120
சந்தனங்கெந்தஞ் சவ்வாதுபனிநீர்
சாந்துபுனுகு களபகஸ்தூரியும்
சிந்தைமகிழவே கண்டுகளிக்குஞ்
செழுந்திருநாசி சுகதுக்கநித்திரை
பைந்தமிழ்வாக்குடன் பாணியும்பாயுரு
பாங்காயுபஸ்தமைந் தாச்சுதுபாகமாய்
அந்தமுங்கால்பரபான முந்தாரணை
யைம்புலனாவலும் லிங்கமிதாண்டையே- அடை. 

பாடல் எண்:- 121
வசனங்கமன ந்தானவிசர்க்கம்
வாழுமேயானந்த மைந்திதுங்கூடியே
நேசமும்வார்த்தை நடக்கைக்கொடுக்கும்
நீருமலமுமாதாரமீ தாச்சுது
நேசமனபுத்தியாங்கார சித்தமு
நேராயிதுநாலு நின்றுநடக்கையால்
ஓசைநினைத்திடும் புத்திவிசாரிக்கு
மோங்காரக்கோபமுஞ் சித்தம்பொருந்திடும்- அடை. 

பாடல் எண்:- 122
உருவமுங்கொண்டு வுலகெங்குஞ்சுற்றி
யுழன்றுவுழன்று வுணர்ந்துதவிப்பதும்
அறிவொன்றுழன் றுமேயாக தத்துவமு
மையாறு முப்பதுமெய்யாகக்காட்டியே
கருவிலமைத்ததின் காரணசற்குரு
காட்டியதத்துவக் கட்டளையின் படி
திருவுருஞான சிவசத்தியம்பிகை
சின்மயசுரூப சிரோமயமாமது- அடை. 

( விருத்தம் )
பாடல் எண்:- 123
கங்கையெனுங் கதிர்மதியுந் தரித்த சோதி
கனகரத்ன மானுடனே மழுவு மேந்தி
பங்கையமா மறுகுதும்பை கொன்றை சூடிப்
பதினாறு கலையணிந்த மூலந் தன்னில்
திங்களெனும் புவனமெல்லா நிறைந்த சோதி
திரிபுர த்தைக் கனலாக வெரித்த வீசன்
செங்கநதி யென்றுதிரு மூலந் தன்னில்
செனித்தெழுந்த கருவியெல்லாஞ் செப்பு வேனே. 

பாடல் எண்:- 124
பூதாதி யைந்துநின்ற புகழுஞ் சொன்னேன்
புலனைந்தும் விபரமதாய்ப் பொறியுஞ் சொன்னேன்
சூதான கர்மவிந் திரியஞ் சொன்னேன்
சுகஞான விந்திரிய மைந்துஞ் சொன்னேன்
தீதான அந்தக்கரண நாலுஞ் சொன்னேன்
தெளிவான ஜெக நாத ரருளி னாலே
ஆதரவாய் நின்றதச வாய்வுஞ் சொன்னே
னதுகடந்து வறிவதற்கு வருள்செய் வேனே. 

பாடல் எண்:- 125
உணவறிந்து நினைவறிந்து வுணர்ச்சி கண்டு
உள்ளறிந்து புறமறிந்து வுரிசை கண்டு
மனமறிந்து மதியினின்று மகிழ்ச்சி பெற்று 
வசனமெனுங் கேள்வியதின் வாய்மை கேட்டுக்
குணமறியா தாசையினா லழிந்து நின்று
கூர்ந்துமன மெழுந்துவொரு கருமஞ் செய்து
நினைவுதவ றாமலொன்றாய்ப் படைத்து நின்றேன்
நிகருடைய தத்துவமுப் பதுஞ்சொன் னேனே. 

பாடல் எண்:- 126
சொன்னவகை தொகையறிந்து சொல்பே தங்கள்
சொல்லவில்லை தசநாடி தசவாய் வுந்தான்
இன்னமொரு வகையறுபத் தாறுஞ் சொல்ல
விவர்கள் நின்ற நிலைசொல்ல வீடுஞ் சொல்ல
விண்ணம்வரா திவர்கள்செய்யுந் தொழிலுஞ் சொல்ல
வேதாந்த மறியாத முடிவுஞ் சொல்ல
அன்னையெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
யவதரித்து நின்றநிலை யருள்செய் வோமே.

( கொச்சகம் )
பாடல் எண்:- 127
மருவுதிருப் பொற்கமலம் வல்லபைதன் வீட்டிலொரு 
கருவுருவா யைம்பூதங் கலந்தே யொருபுறமாய்
அருவுருவாய் நாதவிந்து அறுகுநுனி மேற்பனிபோல் 
மருவியைம்பத் தோரெழுத்தில் வந்தவகை சொல்வேனே. 

பாடல் எண்:- 128
தாங்கிநின்ற மூலமதில் தானுமொரு வீடுகட்டி
வாங்கிநின்று வட்டமிட்டு மாறியிரு காலாக
ஓங்கி முளைத்ததுதா னொன்றே கொழுந்தாகி
நீங்காமல் நின்றகா ணெல்லிக் கனியாச்சே. 

பாடல் எண்:- 129
சத்தி யுதித்ததிருச் சன்னிதியின் முன்பாக 
முத்திதரு மெய்ஞ்ஞான மூவரனுக் கிரகமதால்
சுத்தியொரு பந்தலிட்டுச் சூழ்ந்ததச வாய்வுகம்பாய்ப்
பத்திபடர்ந் ததுகாண் பதினாலு லோகமதாய். 

( கலித்துறை )
பாடல் எண்:- 130
மாறிக் கலைகொண்டு வம்பர வீதியின் வட்டமதில்
தேறித் தெளிந்து வளைத்துக்கொண் டேன்தச வாயுவைத் தான்
ஊறி நடக்கின்ற பானத்தின் வாசி நுனிபிறழா
ஊறிக் கருவி லுறவாகி நின்று வுதிக்கின்றதே. 

பாடல் எண்:- 131
சாதியுங் கண்டுகுல மேவகுத் திந்தத் தாரணியில்
வாதிகள் தள்ளி வழக்குரைப் பார்மனு நீதிகண்டு
நீதியும் வேதநிலை கண்டுரைத்த நேர்வீட் டுக்குள்ளே 
சோதியைக் கண்டு வுறவாகி நின்று துலங்கினனே. 

( வெண்பா )
பாடல் எண்:- 132
அத்தி புரத்தி லருகிருந்த தாக்கையது
சத்திசிவ நாதவிந்து தான்கூடி- விந்ததுமே
மூலக் கருக்குழியில் முச்சந்தி வீதிவளர்
பாலகனா யுற்பவிக்கும் பார். 

பாடல் எண்:- 133
குருலிங்க சங்கமது கூறுமறு கோணவரை
இருமென் றழைத்து விருந்தங்கு- உருவாகி
நின்றறுபத் தாறு நிறைந்த கருவியெல்லாம்
கொண்டமைந்த வாறதனைக் கூறு. 

பாடல் :- 134
ஈச னுறவாகி யெங்குஞ் செனித்திருந்த
நேசமது சாதிலிங்க நேர்மையைக்- கோசமது
நாதவிந் துற்பவமே நானறிந்து ஞானவெட்டி
பேதமில்லை சாதிகுலம் பேசு. 

ஆறாதாரவகை இந்திரிய விவரம். 
( தரு )
விபரஞ்சொல்லுகிறேன்- தசநாடி- விபரஞ்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 135
விவரஞ்சொல்லுது மிடைபிங்கலைசுழி
மேவுமத்திச் சிங்குபுருஷன் காந்தாரியும்
அம்பலம்புருடன்கு குதன்சங்குனியு
மாகத்தசநாடியை யிரண்டாண்டையே
இபரம்பெருவிரல் மேலுமிடைகலை
யின்பம்வலதுபெருவிரல்பிங்கலை
சுபரஞ்சுடரொளி மேலுமோங்காரமாய்ச்
சுற்றியேநிற்குஞ் சுழிமுனையாண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 136
மூலச்சுழிதனிலே முனைத்தாக்கையு
மீறியேபெருநாடி யுயர்ந்துடன்
மேலைச்சிரமகமேரு முடிவளர் 
விற்புனமுங் கருவுற்பனஞ்சொல்வேனான்
கால்கொண்டு நாழிகலைகொண்டு வாய்வதுங்
காரணமாகவே கண்டமதாய்வளர்
வேல்கொண்டுமே குழல்கொண்டுடன் மூலமே
வித்தாய்முளைத்தொரு பத்திதுநாடிகாண்- விபரஞ். 

பாடல் எண்:- 137
கண்டமதுநரம்பான குழைதனில்
காந்தாரிநின்று கலந்துநீர்பாய்ந்திடில்
அண்டமதிலத்தி சிங்குவைத்தானு
மவற்றையு நாலுமறிவிப்பதாகுமே
நின்றிடுஞ் சிங்குவையப்பதுவின்மயம்
நின்றநிறமது வுப்பதுவேசலம்
விண்டலம்புருடனிரு கண்ணளவு
மேவுங்காந்தாரியிங்கா தளவாண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 138
அத்தியுநின்றதது வலபாரிச
மானதளவா யமைத்தளவாய்பிர்ம
வித்தையுமாருயிரைம் புலனாதிகள்
வேதங்களோது மேலுந்தாள்வாயினி
சுத்திநிற்குஞ் சுகாதீதசங்குனி
சுந்தரலிங்கஞ் சுகந்ததாள்பாரிசம்
மித்தமேவுங்குகுதனு மானந்தம்
நேருந்தாள்வாயுமே நின்றிடுமாண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 139
நாடியீரைஞ்சு நரம்புகள் கூடியே
நல்கிநடப்பது நட்புகள் கண்டிடில்
நீடியுலாவும் மசையுந்தடுக்கம்
நிரந்தர தாதுசதந்தரநாடியே
நாடியசையுமடக்கு முடக்கு
நடந்துமேயோடி நகர்ந்துபுரண்டு
மோடிகூடியிழுக்கு நரம்புநீண்
டேறிமாறிபடுக்கும் பாராண்டையே- விபரஞ். 

பாடல் எண்:- 140
வாய்வுதச பத்தின்வாறுமறிந்திடில்
வளமையாம்பிராணன் பானன்வியானனும்
சேயுமுதானன் சமானன் கூர்மகனாகன்
திரிகரனாகிய சித்திரநாடிதான்
ஆயுநாடிநரம்பதுவுந் தனஞ்செய
னருள் தருவேதந்தத்துவனீரைஞ்சு
பாயுந்தசவாய்வு பத்துடனானதும்
பார்க்கப்பார்க்கப் பரீட்சைகளாயிடும்- விபரஞ். 

பாடல் எண்:- 141
பிராணன்மூலந்தனில்மேல் தொடர்ந்தோங்கியே
பின்னும் பனிரெண்டுவங்குலமோடிடில்
அறிவதுநான்குபண்டடங்கி நாலோடும்
அபானன் மலசலமறிந்து போக்கிடும்
பிரியும்வியானனு முண்டசாரந்தனைப்
பிரித்தெழுந்தெழுபத்தீராயிர நாடிக்கும்
தரியுமுதானன் செரிப்பித்தேப்பமிடச் சமானன் 
சரியாகத்தானிருக்கும்வாறு- விபரஞ். 

பாடல் எண்:- 142
நாகன்களைவிக்கல் சோம்பலுண்டாக்கிடில்
நற்கண்ணிலேநின்று கூர்மனிமைத்திடில்
தேகத்திரிகரஞ் சோபமுண்டாக்கிடில்
தேவதத்தனுங்கொட்டாவி நகைத்திடில்
வாகச்சிரித்திடில் தனஞ்செயனுச்சி
வாழ்வதுமேலேனுந் தொடங்கியாத்துமம்
ஆகமடங்கியப் போதினிலண்டமது
பிளந்தாக்கினை யப்பாலோடிடுங்காண்- விபரஞ். 

பாடல் எண்:- 143
இந்தவிதமறிந் தெவ்வுயிர்க்குமீச
னெறும்புமே கடையானை முதற்கொண்டு
சிந்தைசெய்யாமல் வெவ்வேறதின் கூறதாம்
செந்துக்களுற்பன விந்தையிதாண்டையே
சுந்தரலிங்கஞ் சுதாதீதமந்திரஞ்
சுக்கிலவிந்து சிரசண்டமாயிடில்
அந்தரகங்கைச்சடை முடியீச
னமர்ந்திடுங்கோசமரன் கொலுவாண்டையே- விபரஞ். 

( விருத்தம் )
பாடல் எண்:- 144
இடைகலையும் பிங்கலையு மிரண்டுங் கூடி
யிருகாலில் பெருவிரல் மேலே நின்று
நடுவிலொரு கத்தரிக்கோல் மாற லாகி
நாசிமுனை முட்டிநிற்கு நயந்து பார்க்கத்
திடமுடைய சுழியின் முனை மூல நோக்கிச்
சிரசளவு மாதார மாகி நிற்கும்
அடைவான சிங்குவைத்தா னாவுக்குள்ளே 
யன்னமுடன் தண்ணீரு மமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 145
வட்டமிட்ட புவியதனில் குகுத னிற்கும்
வலதுதாள் காந்தாரி வாக்கில் நிற்கும்
இஷ்டவலம் புருடனிட தாள வாய
மிருந்திடுஞ்சங் குனியும் லிங்கத் தாள்வாய் நிற்கும்
சட்டமுடன் குகுதனிற்கும் பானன் தாள்வாய்ச்
சார்வாகுந் தசநாடி சமைந்த நேர்மை
அஷ்டதிசை புகழுமுட லுயிரு மாக
ஆதரவா யாவிநின்ற தருள்செய் வேனே. 

பாடல் எண்:- 146
பேரான பிராணன்பெரு மூலந் தன்னில்
பிலத்தவீரா றங்குலத்தில் பீள வாங்கி
நேரான கண்டமதி லெட்டெட் டாகி
நிலைபிசகா நாலுமது வெளியி லோடும்
சீரான வபானனுந்திக் கமலத் தின்கீழ்த்
திறமாக மலசலத்தைக் கழித்துநிற்கும்
ஈறான வியானனுண்ட வண்ணந் தண்ணீ
ரெழுபத்தீ ராயிரநா டியிலுஞ் சென்றே. 

பாடல் எண்:- 147
நின் றிலங்கு நாடியது பிரித்து வைக்கும்
நிகழ்த்திடுமு தானன்செரிப் பித்தே நிற்கும்
ஒன் றிலங்குஞ் சமானனுண்ட வன்னந் தண்ணீ
ரொருவருக்கு மேறவொட்டா திருக்கு மாகில்
தன் றிலங்கு நாகனுமே விக்கல் கக்கல்
தனை மிகுந்த கூர்மனிரு விழிநீர் பாய்ச்சல் 
அன் றிவிழி சிமிட்டிவைக்குந் திரிக ரன்றா
னாயாசம் சோம்பல்தும் பலசதி யாமே. 

பாடல் எண்:- 148
வசதி நகைத் திடுவனெனும் வழலை யாவன்
வகைத்திடுவன் தனஞ்செயனு முச்சி யேறி
நிசதி நின்று மேலாகத் துடிக்கச் செய்வன்
நிரந்தரமா யாதார மேலாய் நிற்பன்
நிசதியினால் சரீரத்தில் வாய்வுக் கெல்லாம்
நிஷ்களமா யதிகாய நிலைத்த தாண்டே
இசைத்ததிரு மூலனா ருரைத்த வண்ண
மினியதொரு ஞானவெட்டி யியம்பி னேனே. 

பாடல் எண்:- 149
நிரந்தரமாய் மூலமென்ற பாண்டந் தன்னை
நீடுலகி னடத்திவைத்து மோசஞ் செய்தல்
தரந்தரமாய்க் கருவியெல்லா மாண்ட பின்பு
தனஞ்செயனு மகண்டவெளி சார்ந்து வேகி
அறுந்துதச நாடியெல்லா மசைவெல் லாம்போ
யாதார மாறுமகன் றசைவு மற்றுச்
சிறந்தவுட லுயிர்கூறிச் செயலுஞ் சொன்னேன்
தெரிசனமுங் கண்டுதிரு வுருசொன் னேனே. 

பாடல் எண்:- 150
திருவுருதன் மலர்தரித்த பரனைப் போற்றிச்
செப்புகிறேன் குறைக்கருவி தெளிந்து தானும்
மருவுமதி மலர்க்கமல விதழின் மேவும்
மதுரசர் வாணியருள் மகிழ்ந்து வென்னை
அருவுருவாய்க் கருவிகர ணாதி யெல்லா
மடிபிசகா நடுதனையு முடியுஞ் சொன்னாள்
குருவருளா லம்பிகைப்பெண் கமலம் போற்றிக்
கூறுகிறே னுடலெடுத்த வரலா றாண்டே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 151
வாரான கொங்கைமட மாது கருக்குழியில்
பாராமல் வந்துதித்துப் பரிதவித்து நின்றேன் காண்
ஊராங் கருவூரை யுற்றதுணை யென்று நம்பி
மாராட்டத் துள்ளேயான் வந்து சமைந்தேனே. 

பாடல் எண்:- 152
பாராம லேயெழுந்து பத்தியருள் சித்திபெற
நீர்மேற் குமிழியென்று நினைவி லறியாமல்
சீர்மே லெழுந்தசிவ நாதவிந்து தன்னருளால்
ஊர்மேல் வளர்ந்துமன துள்ளமதி கெட்டேனே. 

பாடல் எண்:- 153
காயா புரிநகரிற் கனககிரி மேவிவளர்
மாயாப் பிறவியெனு மகிழ்ந்திருப்ப தெக்காலம்
தாயாய் முலைகொடுத்துச் சார்ந்தென்னை யீன்றகுரு
தேயா மணிவிளக்கே செம்பொனரு ளம்பிகையே. 

பாடல் எண்:- 154
அம்பிகைப்பெண் செம்பொன்மணி யமிர்தரச பானமருள்
நம்பிதிரு வம்பரமே நாடிநட னம்புரிவாய்
உம்பரருள் நாதவிந்து வோர்கருவி யென்றறிவால்
கும்பமுனி யாலுரைத்த கொஞ்சும்ரத்ன மாமதியே. 

பாடல் எண்:- 155
ஆதியந்த நிர்க்குணமே யண்டபிண்ட மேவுதிருச்
சோதிநட னம்புரியுஞ் சுழிவிட்டு வாசலிலே
நீதிக் கருவூர் நிலையாய்க் குடியிருந்து
சாதிகுல மெல்லாந் தவிர்ந்துசதுர் மேல்வளர்ந்தே. 

( வெண்பா )
பாடல் எண்:- 156
தூராத கும்பிதனில் துலையாத பாண்டமதில்
வீராக வீற்றிருந்தேன் மேல்வீட்டில்- நேராக
சண்ட னணுகாமல் சதுஷ்கமல சந்நிதியில்
அன்றுதித்து வந்தேன்கா ணாண்டே. 

பாடல் எண்:- 157
பசுபாச யோனிதனில் பாராம லேயழுந்தி
விசுவாச பாதகராய் விரகழிந்து- நிசுவாச
நதியிற் கரையோர நவசித்திர மண்டபத்தில்
விதியே கதியெனவே விந்து. 

பாடல் எண்:- 158
விந்து வழியறிய மேதினியில் யானுதித்து
வந்தவழி கண்டறியா மையல்கொண்டு- தையலுடன்
விரக மதுசுகமே யின்பது வேகடலில்
அரவமது வாய்வினையென் றறி. 

( கலித்துறை )
பாடல் எண்:- 159
சுருதி முடிந்த திரிகோண வட்டச் சுழிமுனையில்
இருந்து வளர்ந்து கருவுரு வாகி யினிதசையான்
கருதி விளங்கு மதிமலர் வாசங் கனகிரிமேல்
சதுஷ்கோண வீட்டி லிருந்துமெய்ஞ் ஞானத் தலமறிந்தே. 

பாடல் எண்:- 160
மடலோலை கொண்டு வெழுதாத சோதி வடிவுதனைச்
சடமேவு சின்ற வகையுரைத்தேன் சர்வ காலமெல்லாம் 
உடல்மேவு கின்ற கருவூ ரதுதனி லுள்ளதெல்லாம்
திடமாக யானுஞ் சபைமேவி நின்று தெளிவிப்பனே. 

வசையமுறை
 ( தரு)
வசையஞ்சொல்லுகிறேன்- ஆண்டைகேளீர் வசையஞ்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 161
வசையமினிஐந்தும் வசனிப்பதாகவும் வகுக்கமா
வசையம்பருவசையமும்ரெண்டு
சுசையமலவசையஞ்சல வசையமும்ரெண்டு
சுக்கிலவசையமுடனை ந்துங்காணாண்டையே
அசைதலைந்துகுணமு மறிய
வசையமதினாக்கைரட்சித் தருளுமாண்டே யுனதுபதம்
நிசைதலம்பிகைமாது நிலைத்தபடியுரைக்கும்
நெறியைத்திருவள்ளுவன் நிகழ்த்தஞானவெட்டியான்- வசை. 

பாடல் எண்:- 162
அன்னந்தண்ணீரிருக்கு மிடமும்
மாவசையமதனை யினிப்பிரிக்கு மிடமும்பருவசைய
முன்னுமலமுஞ் சேருமிடமுமலவசைய
மூறியேநீரதுசேருமிடமுஞ் சலவசையம்
சொன்னபதிக்கெட்டாத சிவமூலநாதவிந்து
சுக்கிலவசையமென்று சொல்வேனாகமப்படி
தன்னைத்தனையறிதல் தலமுமறிதலுமே
சங்கையாவதுஞான தத்துவக்கட்டளையாண்டே- வசை. 

பாடல் :- 163
கோசமயமுமைந்துங் குறியறிதலும்பேத
குணமாமன்னமயத்தால் பிராணமயமிரண்டு
வாசமுமன்னந்தனிலும் பிராணமயமுந்தோன்று
மன்னமயத்தில் பிராணமனோமயங்களுந் தோன்றும்
நிசமாமனோமயத்தில் விக்கியானமயமுந் தோன்றும்
நிருவிக்கியானமயத்தி லானந்தமயமுந் தோன்றும்
இசைவாமெண்சாணுடலிலெழு பத்தீராயிரமுமிருந்து
காத்துரட்சித்து இருவினைகளுஞ்சூழ- வசை. 

பாடல் எண்:- 164
மூலாதாரத்தில் சுவாதிஷ்டானமுமறிதல்
மூலமுமணிபூரக மனாகதம்விசுத்திகாணு
மேலாமாக்கினை யுமாதாரமு மாறுவிதமாய்விசித
மிதுவறியவிதியை வெல்லலாமோசொல்
மூலமெனுங்குய்யத்து நடுவேசுவாதிஷ்டான
முதலானதுவேலிலங்குஞ்சிவமே ஞானப்பிரகாசம்
ஞாலமுமணிபூரகம் நாபிக்கமலமது
நாடியவனாகதமு மிருதயமென்றிதுகாணும்- வசை. 

பாடல் எண்:- 165
நின்றதிதுவிசுத்திகண்டந்தனில் நினைக்கும்
நேராவாக்கினையின்மேல் மதியங்கண்டதியலாம்
மண்டலமூன்றுமறிதல் வன்னியெனு
மக்கினிமகிழுமண்டிலமிதுவகையறிவது நல்லோர்
அண்டர்கள் முனிவர்கள் போற்றுமாதித்த மண்டலமெய்தல்
அதிலுதித்திடுஞ்சந்திர வகண்டமண்டலஞ்சூழும்
கண்டமெப்படி யண்டமண்டலமறிந்தெந்தன்
கருத்தில்நினைத்தபடி கருவிதொண்ணூற்றாறும்- வசை. 

பாடல் எண்:- 166
அக்கினிமூலந்தொடங்கி நாபிக்கமலவிதழள
வாகியேயுதித்து ஆதித்தமண்டலமீறி
திக்கில்திக்கிலினிய நாபிக்கமலமெய்தல்
திசைகளெட்டதற்குந் தொட்டளவிற்றெளிந்திலகும்
தக்கபுகழுஞ்சந்திரமண்டல மிருதயத்தில்சார்ந்து
சார்வாய்த்தொடங்கி சடைமுடியடிநடு
விக்கிரமகதிர்மதி சூழக்கினிமண்டலமூன்றும்
விளங்குமதுரத்தமிழமிர்த சிந்துரத்தினம்- வசை.

பாடல் எண்:- 167
மும்மலமூன்றுமுதிக்குமுன்னமே முறைமையறி
முனையுமாணவமாய்கை மோகமதாகிய காமியம்
நிர்மலசொரூபநிலைநினைவு முக்குணஞ்சொன்னேன்
நெறியைச்சொல்லவுஞான நேசமேயறியலார்காண்
அம்மெனுநானென்றுநாவை ஆணவங்காத்திடிலுமே
யபசயமேதனக்கு யாவரறியாக்கோபம்
தம்முயிர்போந்தனைக்கொன்று தனையறியாமல் நிற்குந்
தன்புத்தித்தானறிந்தாலுந்தா னொருவரைக்கேட்கும்- வசை. 

பாடல் எண்:- 168
நம்பிமனதுவேறாய்க் காமியந்தனைக்கொன்று
நானுடலங்கண்டதுக்கெல்லா நானென்றுமாசைப்படுதல்
வம்புமிகவுஞ் செய்தல்மாதர் மங்கையர்மேலு
மையல்கொண்டுவிரகத்தால் வாதுபோராடல்பேசல்
தும்பமுன்றுதித்திடும் வகையையாவர்கள் காண
துடியாய் வாதமும்பித்தஞ்சுகந்த சேத்துமமூன்றும்
தம்பனமுள்ளவாய்வது மோடிக்கலக்கமதாய்த்
தாபமுஞ்செய்தேயக்கினி சார்ந்துமத்திபஞ்செய்தல்- வசை. 

பாடல் எண்:- 169
வாசமுள்ளபிராணத்தின் வாய்வுநெட்டிட்டுமோடி
வளருமக்கினியதைமடக்கி மத்திபஞ்செய்தல்
நேசமுடனேபித்தம் வன்னியோடனுமித்து
நிறைந்துமத்தித்துசலம் நெடியவினையுண்டாக்கும்
சேதமிகவுண்டாகுஞ் சேத்துமரோமத்துவாரம்
சிறந்துவோடியிடைபின் பிரியாச்சிநேகஞ்செய்தால்
மாதராசையிலிந்தநாடி பின்னிட்டடங்கி
மறிந்தறியாமல்தாது மடங்குமென்றாகையாலும்- வசை. 

பாடல் எண்:- 170
இச்சைமூன்றானவித மினியுரைக்கும்வகைகா
ணிதுவேபுத்திரவிச்சை லோகவிச்சையுமாகும்
பட்சமாமர்த்தவிச்சையுமிதன் கூறறியவெந்தன்
பரிபூரணவம்பிகை பாதமலர்பணிந்தேன்
அஷ்டதிக்கும்புகழு மகத்தீசருள்போற்றியபடி
யன்றிருவள் ளுவனவனிமீதிலிந்நூல்
நிஷ்டையோகத்தின் ஞான நிகழ்ந்தமூன்றுவகை
நிகழுமிச்சையதின் சுகத்தைக் கண்டவனாண்டே- வசை. 

பாடல் எண்:- 171
புத்திரன் இச்சையின் குணம் பொருள்மேலாசைப்படுதல்
புவியில்மண்ணின் பெண்ணாசை புவனமாளவுஞ்செய்தல்
அர்த்தத்தின்மேலுமதிக வாசைப்படுதல் நெஞ்ச
மறிதலோகவிச்சையின் விதியின்பயனுரைத்தல்
வெற்றிப்பாரிலுயர்ந்த காணியாட்சிவிளம்பல்
வெகுநாளுறவின்முறை தகுந்தகாதுவிளம்பல்
உற்றகாரியமுணர்ந் திச்சையத்தின்மேலாத
லுசிதப்பணிகள் செய்து விசிதம்பார்த்திடுமாதல்- வசை. 

பாடல் எண்:- 172
அர்த்தவிச்சையின்குண மதிககாமியந்தேடியன்
பதிகமுமாசை யின்பமதிலுண்டாதல்
எத்திசையினெந்த சாதியிலுமங்கையரின்னா
ரிவர்களெனு மெண்ணாமலுமிச்சித்தல்
சத்திவிரகதாபசங்கையிலு மனதாய்சார்ந்துவிகார
மெய்தல்தனைப்புகழ்ந்துணர்வாதல்
வித்தையென்னுமிச்சை வரலாறுமூன்றின்
விபரமெடுத்துரைத்தேனாண்டையே தொடுத்தேனாதவிந்தாலே- வசை. 

பாடல் எண்:- 173
குணவிசிதலட்சண மதிலுதித்தபடி
குறித்துமூன்றுவிதமாய் விரித்துச்சொல்வேன்காணும்
மனதாகியகுணராசத தாமசம்ரெண்டுமகிழுஞ்
சாத்திகத்தோடுபுகழுமூன் றுவிதமாம்
துணமாம்ராசதகுணம் வெகுளிபலபேசாமல்
துதித்திடுவோந்தமக்குக் கொடுத்திடுதலுமேன்மை
பணம்விசிதவேண்டிய பாக்கியங்களளித்தல்
பண்புபாராட்டலாதல் பலவுபகாரஞ்செய்தல்- வசை. 

பாடல் எண்:- 174
தனைச்சார்ந்தோர்கள் தமக்குத்தகைமை காத்திடும்பேசல்
தனதுதம்முயிர்போலுஞ் சார்ந்துரட்சித்திடுதல்
இனம்வேண்டிடுதல் பகையிகத்தல்பலகலைக
ளிசைந்துலகிலகங் கொண்டிருந்து வாழ்தலுமுண்மை
கனமுமினமுநலம்புகழும் வாஞ்சையொடுக்குங்
கருதுந்தாடாண்மையின் பங்கருவிலமைத்தபடி
முனையும்ராசதகுணந்தனையே யறிவிப்பதுமெனையே
புகழ்வதில்லைதுணையே நாதவிந்தருள்- வசை. 

பாடல் எண்:- 175
மிருளுந்தாமசகுணவிசித மேன்மேல்விளம்பல்
மிகுதியாதொருபழிவிகடம் வஞ்சனைசெய்தல்
அலறும்வழிபாடாக வொழித்தல்வணக்கமாற
லரண்டுவரும்வெகுளியதனை விரும்பவெனல்
பிரளல்செய்தநன்றியைப் பிரித்தலுறுதிமாறல்
பெரிதாய்விந்தைமிகவும்பேசல் கடூர்வாஞ்சை
முரளுமுகத்திடறுபகையுடனேயும் வாழ்த்தல்
முன்புரைத்தபழியேமுனைதல் கூறலுமாண்டே- வசை. 

பாடல் எண்:- 176
கொலைகள்காமியமும் பொய்குறித்தல் கோள்கள்பொல்லாங்கு
குசிதம்யாவையும்புகழ் குரோதங்கொடூர மெய்தல்
அலைதல்காமத்தினிவை குரோதமதிசங்கை
யசத்தியநாள்தோறுமெய்தலறித லாண்டையேகேளீர்
பலபலவும்கடிசிலதுதொழில் விகற்பம்பகர்தல்
பாவியெனவுஞ் ஜெகதலமுமதியா
கலகப்பிரியனெனுமுலகமாத்தியஞ் சொல்லுங்
கருவில்தாமசகுண காட்சியிதாண்டையே- வசை. 

பாடல் எண்:- 177
அதிதசத்துவ குணமறிதலனேகவித
மனைத்தும்படைத்தகர்த்தன் மனதுளிருப்பதெனில்
விசித்தமதங்கடிவு வாய்மைதயவொடுக்க
மிகுத்தசாந்தகமைதன நினைவுதகைந்திடுதல்
உதித்தவன்புபெருமைபுகழ்தல் குணவிசித
முரிமைமறையினிறை தருமமானமியக்கல்
கதித்தநல்லோர்க்கீதல் அறிஞர்களைவாழ்வித்தல்
கருதுமிறைவனடிபணிதல் நலமறிதல்- வசை. 

பாடல் எண்:- 178
மகத்துக்களின்மனது மகிழ்ச்சிவருவதெனில்
மலர்க்கமலபதத்தில்வணக்கஞ் செய்திடுதலால்
அகற்றும்பழியகற்றல்விளையும் பிணியொழித்த
லதிதநல்லோர் பெரியோரவர்களுக்குப் பொருளுமீதல்
இகத்திலறமுந்தேடலுறவின் முறையதீத
மினமுஞ்சுற்றத்தாரையுங்கனமுங் காத்துரக்ஷித்தல்
மிகுத்தல்பசியகற்றலதிதிபரதேசிகள்
விரும்புமன்னபலாதிவிளங்குமேவுமீ தாண்டே- வசை. 

பாடல் எண்:- 179
ஆத்திரைவாசங்கள் செய்தலருமறையோரைக்காண
லருள்தேவதைகளுக்குமாகு பலிகொடுத்தல்
தேத்தியஞானப்பிரகாசந் தெளிந்தவர்கள்தமக்கு
சிந்தையையகற்றி யுபசாரஞ்செய்திடுதலால்
போற்றிடும்புண்ணியஞ்செய்தலின் பசுகந்தமலர்
பூசுரர் தமக்குநலம்புகழும் பூசையளித்தல்
வீற்றிடுஞ்சாத்தியகுணவிசித லட்சணங்கண்டு
விளங்குமூன்றின்விபரம் விதித்தவாறதுஆண்டே- வசை. 

பாடல் எண்:- 180
நாதவிந்ததினாலே நரகசொர்க்கமிரண்டும்
நவிலுநல்வினையுந்தீவினையு நாடியவாறில்
வேதங்களுமுதித்தசாரம் விண்ணுமண்ணாகில்
விளங்குநல்வினையும்வந்துதித்தல் புண்ணியஞ்செய்தல்
ஓதுந்தீவினையுஞ்செய்திடும் பாவங்களுமெய்த
லுலகமாதிதமிவ்வாறுடலெடுத் துவமையால்
மாதுவம்பிகையெந்தன் மனதுக்குளுணர்வித்த
வரலாறறிந்திந்நூல்வசனித்தே னாண்டையே- வசை. 

பாடல் எண்:- 181
ராகமிதுவெட்டான நடத்தையிவ்வாறறிதல்
நலத்தகாமக் குரோதலோபமோகமதாகி
அகந்தனிலுதித்த மதமாச்சரியத்தோடு
மமைத்திடலுமிடும்பையறிதல் வேட்கையிதுகாண்
பாகமதாகியதே கஞ்சரீரங்களுதிக்கும்
பலனேயின்னதினிதும்பகர்ந்து சொலுவேன்காணும்
தேசக்கட்டளையிவ்வாறுசெய்கை செந்துகட்கெல்லாந்தெளிந்து 
சீர்பிசகாமல்திருத்த ஆண்டையேகேளீர்- வசை. 

பாடல் எண்:- 182
மாதரைக்கண்டாசைகொண்டிடுங்காண் விரகதாப
மையல்கொண்டதிதகாமம்வருதல் மன்மதபாணம்
பேதபேதமில்லாமல்பிதற்றும் வணக்கமில்லா
பிணக்குமதிதகுரோதந் தனக்குந்தனைத் தெரியா
ஓதுமனதிலொன்றைநினைத்தபடி முடித்த
லொருபிடியாய்ப்பிடித்தலுறுதி விடாதுலோபம்
ஏதுவாகிலும்பெருமையின் பசுகாதிசுக
மெய்துமனமகிழ்ச்சியிதுவே மோகாதியோகம்- வசை. 

பாடல் எண்:- 183
சூதுமனதிலெண்ணல்துடியாக் கோபமுரைத்தல்
தொடுத்திடுதலும்பழிதுன்பமெய்திடுமதம்
யாதொருகாரியங்களிலதுவிச்சை மனதெய்தலானந்தம்
பெருகியின்பமடையு மாச்சரியங்காண்
வாதுபோராடலொருசொல்லாயிரம் விரிவாய்வனல்
கொண்டாங்காரமெய்தல் வருமிடும்பையுமாதல்
வேதுவித்வேஷணம்பலவும் பலவுமெண்ணல்மெய்
யாங்காரக்கொள்ளல்வேறு செய்தலும்வேட்கை- வசை. 

பாடல் எண்:- 184
ஆகமத்திலுதித்தராகமத்தின் பரீட்சை
யதிதகுணலட்சணம்விதி தவறாமலெட்டும்
பாகமதாயுரைத்தேன் பகவான்சொற்படிபாரில்
பலகலையுந்தெளிந்து பழம்பொருளைக்கண்டு
ஏகவஸ்துவொன்றாலேயெடுத்தேன் தத்துவநெறி
யெறும்புகடையாயானை யெண்பத்துநான்குமுதல்
தோகைமாதுவம்பிகைசொல்லுஞ்சூட்ச மறிந்தேன்
சுருதிமுடிவைக்கண்டுதொடுத்தேன் ஞானவெட்டியான்- வசை. 

பாடல் எண்:- 185
அவத்தையைந்துமொவ்வொன்றாய் விரித்துசொல்லுவன்காணு
மாக்கிரசாக்கிரசொப்பனஞ் சுழுத்தியொடுதுரியம்
பவத்தைப்பவனாதீதத்துரியாதீதத் தோடைந்தும்படைத்தா
ரெண்சாணுடலிலெடுத்தார் ஜெகத்துள்ளோர்க்கும்
இவத்தையெனுஞ் செனனமிதிலுதித்ததுகாணு
மெவரெவருக்குமிதுவே யேகவஸ்துவிதாகும்
தவத்தில்மிகுத்தவமெய்ஞ்ஞான நெடுதத்துவமறிந்து
தன்னைத்தான்றிந்திடுமே சொர்க்கம்- வசை. 

பாடல் எண்:- 186
ஆக்கிரமுஞ்சாக்கிரம்நிற்கு மதுவும்லலாட ஸ்தானத்திலறிதல்
நெற்றிநேர்மையமசைதல் காயத்தோடென்னில்
வாக்கிற்சொப்பனத்திற்கும் வாழ்தல்கண்டஸ்தானத்தில்
மருவியகருவிகளமைத்த வாறாண்டையே
விக்கிரமச்சுழியின் முனையிருதயகமலந்தனில்
விளங்குந்தானமறிதல் இன்பமிதுவாறுகாணும்
நிக்கிரகதுரியஸ்தான நேருமேநாபிக்கமலம்
நிரந்தரமாயிருத்தல் நிலைக்கும்சரீரமென்னில்

பாடல் எண்:- 187
உத்தமதுரியாதீத மூலாதாஸ்தானத்தி
லுறுதிபெற்றிலகு மிவ்விதத்திலுதித்தவாறு
தத்துவந்தொண்ணூற்றாறுஞ் சரீரந்தனிலுதிக்குந்
தகைமையறிந்துவந்தென் தாய்சொல்லயானறிந்து
வித்திலுதித்தவாறும் விளங்குங்கருவின்வாறு
மிகுத்த தத்துவந்தொண்ணூற்றாறை விதிக்கும்வாறும்
கர்த்தனருளாலுடல் கருதரித்தநேர்மையுங்
கருவிகரணாதிகள்கண்டு ஆய்ந்தவனாண்டே- வசை. 

பாடல் எண்:- 188
சித்தாதிகள்மகிழும்பெரியோர்களும் புகழுஞ்
ஜெயம்பெறவேயுலகில் செந்துக்களெல்லாந்தழைக்க
உத்தமயோகிகளெந்தனுறுதி மிகவுங்கண்டு
யோகவான் திருவள்ளுவனுலகி லவனேஞானி
வித்துவானெனமகிழ்ந்து வேதவேதாந்தசாரம்
விளங்கினவர்கள மிர்தவிசித ரத்னபீடம்
உத்தமரெனுமுனிவர் சிவசிங்காதனமீந்து
வுரையறிந்துமொழிந்த வுவமையீதெனுமாண்டே- வசை. 

பாடல் எண்:- 189
கர்த்தன்செய்கைவிதிகாண் கருவிலமைத்தபடி
காரணசற்குருவாக்கியங் கண்டல்லோதெளியும்
பெற்றபேர்களிப்படிவித்தின் சம்பிரதாயங்கள்
பேசும்பேசினாலென்ன பிராணாயமறியலாமோ
தத்துவந்தொண்ணூற்றாறுந் தானேநீறுநீறாக்கி
சாதித்தால்காயாதிகற்பஞ் சாயுச்சியமறியலாகும்
நித்தம்நித்தம்வாசிகொண்டுய்த்து வூதினாலல்லோ
செத்தபிணமெழுந்து சத்துஞ்சித்தறியலாம்- வசை. 

( விருத்தம் )
பாடல் எண்:- 190
விரிவான துருவமெனு மூல வீட்டில்
வேதமதுக் கெட்டாத ரூப மாகிக்
கருவாகித் தெவிட்டாத கனியு மாகிக்
கதிராகி மதியாகிக் காற்று மாகி
உருவாகி யுடலாகி யுயிரு மாகி
யொளியாகி யலகையெனு முடலுக் குள்ளே
மருவாகி யருள்ஞான சொரூபி யாகி
யங்கமதி லிங்கமதா யமைத்தே னாண்டே. 

பாடல் எண்:- 191
மறைகடந்து வெளிதாண்டிச் சுழிமுனைக் குள்ளே
மறைநான்கு மறியாத மதியைக் காணக்
கரைகடந்து சுழிக்குநடு வணையி னுள்ளே
கதிரிலகுந் திருநாட்டுக் கமல வீட்டில்
நிறையறிந்த கதலியடி பானுக் குள்ளே
நிலையான செங்கநதி கரையின் மேலும்
திரைமேவுந் திருநடன வீட்டுக் குள்ளே
சிவந்தெழுந்து கொழுந்தாகி வளர்ந்த தாண்டே. 

பாடல் எண்:- 192
முத்துதிர்ந்து குலைசாயு மூல நாடு
முனையறிந்து கலைபாயு முவண நாடு
சித்திருந்து விளையாடுந் தெய்வ நாடு
திவ்யரத்ன பொக்கிஷமாஞ் செல்வ நாடு
சத்திசிவ மிருந்துதிரு நடனஞ் செய்யுஞ்
சதாசிவனுங் கொலுவிருந்து வாழ்ந்த நாடு
அத்திபுர மிலகுகின்ற கருவூர் நாட்டி
லறைவீட்டில் குடியிருந்து வமைந்தே னாண்டே. 

பாடல் எண்:- 193
சாதிகுலம் வகுத்திலகும் விந்து நாடு
தானுதித்துப் பத்துதிங்கள் வளர்ந்த நாடு
நீதிமறை சாஸ்திரமாம் வேத நாடு
நெறிபலவுஞ் சகலகலை யுதித்த நாடு
சோதிமதி யாகிநின்று துலங்கு நாடு
சுழிநாடு வளநாடு தொண்டைநாடு
பாதிமதி தனையணிந்த பரம நாட்டில்
பதியெனவே குடியாக வாழ்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 194
தேனருவி யமிர்தநதிக் கசிந்து பாயுந்
தேவர்சித்தர் முனிவர்துதித் திலகு நாடு
ஞானிகள்வந் துதித்திலகுங் கருவூர் நாடு
நல்வினையுந் தீவினையு மமைந்த நாடு
தானவனாய் நின் றிலங்கும் ரூப நாடு
சற்குருவுஞ் சந்நிதியுந் தழைத்த நாடு
வானதிகொண் டறுசுவையை யொளித்த நாடு
வானவர்கள் மகிழுமணி மந்திர நாடே. 

பாடல் எண்:- 195
அண்டபிண்டமிரண்டுமுற் றிலகு நாடு
அருணனெனுஞ் சோமனவ தரித்த நாடு
மண்டலமூன் றுதிக்குமருள் கொந்தி நாடு
மாமறையு மாகமங்கள் வாழு நாடு
கண்டனந்த கருவூரு நாட்டுக்குள்ளே
கனகரத்ன மாதுவொளி வாகி நின்ற
வென்றதிரு வம்பிகைப்பெண் விளங்கும் வீட்டில்
மிகுந்தவறைக் குள்ளிருந்து வமைந்தே னாண்டே. 

பாடல் எண்:- 196
அந்தமுள்ள நவசித்திரக் கூடந் தன்னி
லகண்டமெனுந் தீபவொளி வாகு நாடு
சந்தனமுங் குங்குமமும் விளைந்த நாடு
சர்வவுயி ரெடுத்துடலா யமைத்த நாடு
செந்தியொளி சிவனுமையும் பிரகா சிக்குஞ்
சிறுபிறையு மயிர்ப்பாலந் தேவ நாடு
வெந்தணலு மெழுந்துதிரு நடன மேவு
மேல்வீட்டி னின் றுவுரு வானே னாண்டே. 

பாடல் எண்:- 197
உருகருவாய் நின்றிலங்கு முந்தி நாடு
வுத்தமர்கள் சித்தர்தவம் பெற்ற நாடு
மருநாடு வானாடு மலரி னாடு
மதமுடனே மாச்சரிய மான நாடு
சிறுநாடு கருநாடு செந்தி நாடு
செங்கதிர் பொங்குமுயல் சிறந்த நாடு
அருநாடு குருநாடு வகண்ட நாட்டி
லருள்பெறவே யுருவாகி யறிந்தே னாண்டே. 

பாடல் எண்:- 198
கால்வாங்கி வட்டமிட்டு மேலே நின்று
கமலதிரு வாசலின்கீழ்க் கருதி யானும்
மேல்வாங்கி யுயருகின்ற வன்னி யோடே
வெளிகடந்து நாற்சதுர வீட்டுக்குள்ளே
சேல்வாங்கி நூலிழைத்துப் பாவு மோட்டிச்
சித்திரமாய்க் குழிதனிலே நெசவு மாக்கித்
தேல்வாங்கு விழிமட வார்க ளுள்ளே
சித்திரமாயுடலெடுத்து வளர்ந்தே னாண்டே. 

பாடல் எண்:- 199
வசையமைந்து நின்றவர லாறுஞ் சொன்னேன்
வசனித்தே னவரவர்கள் வகையுஞ் சொன்னேன்
விசயமெனு மூன்றுக்குள் விரியுஞ் சொன்னேன்
விபரமதா யவர்கள் செய்கை விளக்கஞ் சொன்னேன்
அசைவில்லா மண்டல மூன்றருளுஞ் சொன்னேன்
அறிவுடைய கோசமைந்து மதீதஞ் சொன்னேன்
சதவாய்வுந் தாதுநின்ற தலமுஞ் சொன்னேன்
சரீரத்தி னின்றதெல்லாஞ் சாற்றி னேனே. 

பாடல் எண்:- 200
அஷ்டகுண ராகமெட்டுங் கூறுஞ் சொன்னே
னவர்கள்செய்கை விபரமறிந் தனந்தஞ் சொன்னேன்
நஷ்டமில்லா நல்வினைதீ வினையுஞ் சொன்னேன்
நற்குணமுந் துர்க்குணமு நயந்து சொன்னேன்
கஷ்டமெனு மும்மலத்தின் கருத்துஞ் சொன்னேன்
கருவறியா மூடர்குணக் காட்சி சொன்னேன்
தீட்சையெனு மூன்றெழுத்தின் திறமுஞ் சொன்னேன்
திருமுதலாம் வீட்டில்குடி யிருந்தே னாண்டே. 

பாடல் எண்:- 201
ஊனிழந்த வுடலுக்கு ளுயிரின் வாறு
முற்றகுல தத்துவமுந் தொண்ணூற் றாறுந்
தானெடுத்த வுறவின்முறை நின்ற நேர்மை
தனித்தனியே பிரித்துவகை சபையிற் சொன்னேன்
தேனருவி பாயும்திரு நாட்டுக் குள்ளே
சேர்ந்தெழுந்த கருவியெல்லாஞ் சேர்க்கையாக
நானெடுத்த வுடலுமிந்தப் படியே யாச்சு
நயந்தருளு மாண்டகுல மறிகிலேனே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 202
வறுமை தவிர்ந்துமிக வாழ்நாடி வீதியில்யான்
கர்ம வினையாலும் கட்டிவிட்டேன் கருவீடாய்ப்
பெருமையுட னேமகிழ்ந்து பேசுறாய் வளர்ந்ததனால்
அருமைகுலை யாமலே யம்பிகையைப் போற்றினனே. 

பாடல் எண்:- 203
திரைபோட்டு ஆடுகின்ற தில்லைவனச் சோலையினான்
கரைபோட் டணைகோலி காயா புரிநாட்டில்
உரைகேட் டகன்றவெளி யுற்பனமாந் தற்பொருள்கண்
டடைவீட்டுக் குள்ளிருந்து வம்பிகையைப் போற்றினனே. 

பாடல் எண்:- 204
நங்கைசங்கை யில்லாத ஞானதிரு வீட்டிலும்யான்
கெங்கைக் கரையிருந்து கேளிக்கை யாடையிலே
அந்தத் திருக்கோயி லம்பிகைப்பெண் மாதருளால்
பங்கம் வராமலுமே பதியிற் குடியிருந்தேன். 

பாடல் எண்:- 205
சித்திரதனுக் கோடியெனுஞ் செங்கநதி கெங்கைவளர்
பத்திரமா யானிருந்தே பங்கமது வாராமல்
நித்திரையுஞ் சொப்பனமு நேர்மைகடந் தேகவெளி
சத்தியெனு மம்பிகைப்பெண் தாள்பணிந்து போற்றினனே. 

பாடல் எண்:- 206
ஆராய்ப் பெருநதி யங்குவளர் கெங்கையில்வாழ்ந்
தோரா யிரக்கமலத் தொன்றிருநா லுந்தியின்கீழ்
மாறாத ருந்தவஞ்செய் மாமதுர வம்பிகையை
நேராய்ப் பணிந்துவருள் நின்றுவரம் பெற்றேனே. 

( வெண்பா )
பாடல் எண்:- 207
விரிவாந் துருவெளி வெய்யோ னெடுங்குகின்ற
கருவாம் பெருங்குழியில் கால்வளர்ந்தே- னறிவாக
சிரசுரூப மான தேனொழுகு மண்டபத்தில்
வரசுரூப மாய்வளர்ந்து வந்தேன். 

பாடல் எண்:- 208
நூல்வாங்கி நின்றதொரு நொய்ய திருவீட்டில்
கால்வாங்கி வன்னிக் கலந்தே- மேல்வாங்கி
அன்னைசிறு வம்பிகையி னாத்தா ளருட்கமலம்
என்னையழைத் தமுதீந் தாள். 

( கலித்துறை )
பாடல் எண்:- 209
வாங்கித் திரைகொண்டு வம்பிகை பாத மலரடியில்
தேங்கித் தெளிந்து சிவநாத விந்து சிறுவரைக்குள்
ஓங்கி வளர்ந்து வொருகொழுந் தோடி யுலகமெல்லாம்
தாங்கிப் படிந்து சதுர்மேற் குடியிற் றவமிருந்தே. 

பாடல் எண்:- 210
அழியாத மூலக் கருவீடு தன்னி லமைத்தவிந்து
செழிவான நாத முறைந்திடும் போது சிவமதற்குக்
கழியாத வெட்டுங் கழிந்திடி னாலுங் கருத்தினில்தான்
ஒழியா ததுநின்று வயதே யதற்குவுரை செய்வேனே. 

பாடல் எண்:- 211
மருவிப் பிறந்த வலங்கார வீதி மாளிகையில்
உருகித் தெளிந்து வொருதுளி பாய்ந்த வுடலுயிராய்ப்
பெருகித்ததும்பி மயிர்ப்பா லம்வைகைப் பெருங்கரைமேல்
கருவிப்பலகுலத்தாலேயுடலொன்று கண்டுகொண்டே. 

( விருத்தம் )
பாடல் எண்:- 212
உண்மையெனுங் கருவிகள்தாம் தொண்ணூற்றாறு
முடலெடுத்த நேர்மையெல்லா முறையாய்ச் சொன்னேன்
நன்மையுள்ள நாதவிந்து கூடும் போது
நல்வினையுந் தீவினையு மமைத்த வாறு
தண்மையுள்ள ஜெகச்சோதி வகுத்த வீட்டில்
சமைந்திருந்த மைந்தருக்கு வயதுஞ் சொல்ல
வண்மையெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
வசனித்தே னறிந்தமட்டும் வசனித் தேனே. 

பாடல் எண்:- 213
ஊனெடுத்து வுலகுக்கு ளுதித்த பால
னொருமூன்று திங்களினில் மடிந்த வாறும்
கூனுடனே குருடுசெவி டான வாறும்
குறைந்துகைகால் சப்பாணி யான வாறும்
வானெடுத்து வாறுதிங்கள் மடிந்த வாறும்
வளர்பத்துத் திங்கள்சென்று மாண்ட வாறும்
தானெடுத்துப் புவிதனிலே பிறந்த வாறுஞ்
சவமாகி நின்றதுவுஞ் சாற்று வேனே. 

பாடல் எண்:- 214
பத்துவய தானபின்பு இறந்த வாறும்
பருவத்தில் பதினைந்தில் மடிந்த வாறும்
மற்றுமொரு விருபதிலே மாய்ந்த வாறு
மறுவிருபத் தஞ்சதிலே மடிந்த வாறும்
சித்ததித முப்பதிலே செடமு மாய்ந்து
செப்பிடில்முப் பதுவுமஞ்சில் செத்த வாறும்
உற்றதொரு நாற்பதிலே யுயிர்போ மாண்டு
வுயர்கின்ற வைம்பதிலே யுடல்போ மாண்டே. 

பாடல் எண்:- 215
அன்னையெனுங் கருவதனி லுதித்துப் பாரி
லவதரித்து ஐந்துபத்தி லுறந்த வாறும்
பின்னமா யறுபதில் மடிந்த வாறு
மிகவறுபத் தஞ்சதிலே மாய்ந்த வாறும்
இன்னவித மெழுபதிலு மிறந்த வாறு
மெழுபத்தஞ் சதுவுமதில் மாண்ட வாறும்
சொன்னவித மென்பதிலுஞ் சொக்கும் வாறுந்
தொண்ணூறுஞ் சென்றபின்பு சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 216
பூவாகிப் பிஞ்சதிலே மடிந்த வாறும்
பூத்தமலர் காயாமல் போன வாறும்
மாவாகிக் கருக்குழியில் கரைந்த வாறு
மரக்கொடியோ டேமடிந்து காய்ந்த வாறும்
மேவிநின்று விரைப்பழுதால் போன வாறும்
விரைத்தவிரையை முளைத்துவிளை வித்த வாறும்
பாவாகி யச்சதிலே பூட்டி நெய்து
படைத்தகரு விபரமதைப் பகர்வே னாண்டே. 

ஆயுர்விர்த்தி
( தரு )
வயதுசொல்லுகிறேன் நூறாண்டுக்கும்
வயதுசொல்லுகிறேன்- வயது. 

பாடல் எண்:- 217
வயதுசொல்வேனினி நாதமும்விந்துவு
மாதர்கருக்குழி வீதிவிட்டேகியான்
துயரமைத்துச்சுழி வீட்டுவாசலில்
துய்யசெகப்புடன்வெள்ளையுங் கூடிப்பின்
உழுதுபயிரிடு மம்பரவீதிவிட்டோங்கிச்
சுழிமுனைத்தாங்கி மேடேறிகாண்
அழுதாத்துமத்தின் கருவிபின்
பாசமறிந்திடுபூருவமத் தலமாறியே- வயது. 

பாடல் எண்:- 218
நூற்றொருமாவினில் வேற்றுமையில்லாமல்
வீற்றிருக்கும் விந்துநாதமுங்கூடினால்
சாஸ்திரவேத சடாக்ஷரமந்திரந்
தப்பாதுவயது நூறுகாணாண்டையே
சித்திரமாளிகையில்பத்திப்
பிராணவாய்வுவிந்துடனாதம் விளங்கியேமேவிடில்
சுத்தயான்யோகி சுகாதீதஞானிக
ளத்தன்செயல்நூற்றைம்பது வயதுகாண்- வயது. 

பாடல் எண்:- 219
ஆராய்ப்பிருதிவுமோடிக் குறையாம
லங்குலம்பன்னிரண்டாகவும் பாய்ந்திடில்
நேராகுமெண்ணரை நாழிகையோடிடில்
நிர்ணயம்வயது நூறாண்டையதப்பாது
பாரறியும்பிருதிவியுமப்புவில் பாய்ந்திடிலும்
விந்துநாத முங்கூடிடில்
சீரறியுங்கிரியைவாசிவசமதாய்ச்
சித்திபெறும்வயது நூற்றைம்பதாண்டையே- வயது. 

பாடல் எண்:- 220
அப்புவில்வாய்வது மசைகின்றபோதினி
லங்குலம்பதினொன்றாகவும் பாய்ந்திடில்
மெய்ப்பாகவொண்ணேகால் நாழிகையோடிடில்
மேதினியோர்கள் வயதெண்பதாண்டையே
ஒப்பிலாவப்புவிலோடியபானு
மோங்கிப்பாய்ந்ததுவோ ராறுமீராறதாய்
இப்படிநா தவிந்தேகியிளகிடி
லிதுவயதெழுபதிருப்பதுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 221
கூறியவாய்வுபத்தங்குலம் பாய்ந்து
குறைந்துநாலாங்குலமோடிக் கழிந்திடில்
மாறியமைந்தர்க்கு வயதெனுங்கொஞ்சம்
வகுத்தேன் புவியிலுரைத்தேன்கா னாண்டையே
தேறியபானனுதானனிடத்திற் சிநேகஞ்செய்து
எட்டங்குலம் பாய்ந்திடில்
சீறுமஞ்சங்குலமோடிக் கழிந்தபின்
செய்வினைதந்தையால்பை வினையாட்டையே- வயது. 

பாடல் எண்:- 222
தேய்வினில்வாய்வுவசைகின்ற போதினில்
சேர்ந்தொருநாழி பத்தங்குலமோடிடில்
மெய்யுடல்விந்து நாதமுங்கூடினால்
ஆணல்லவயது ஆறுபத்தாண்டையே
பாயும்பிராணன் பானனுஞ்சேர்ந்திடில்
பரவியேவிந்துவு நாதந்தொடங்கிடில்
மாயுங்கருவி வெவ்வேறதுவாகிப்பின்
மைந்தர்க்குப்பாதி மரணம்வந்தெய்துமே- வயது. 

பாடல் எண்:- 223
சொல்லும்பத்தங்குலமோடி யெட்டங்குலந்
தொக்கிச்சுழித்துச் சிதறிக்கடிந்திடில்
மெல்லின்கெர்ப்பந் தரித்திடும்போ தினில்
விரைந்துவயது குறைந்திடுமாண்டையே
கொல்லல்செய்பிராணவாயு மெட்டங்குலம்
கூறிரண்டங்குலந் தூறியேபாய்ந்திடில்
வல்லியின்கெர்ப்பம் வயிறிடிகண்டுமயங்கி
வயதுதியங்கிடுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 224
வாய்வினில்வாய்வு அசைந்துறவாடிப்பின்
நாழிகைமுக்காலொன்பதங்குலம் பாய்ந்திடில்
தாயினீர்நாதமும்விந்துந் தரித்திடில்
தப்பாதுவயதுமுப்பாதா மாண்டையே
பாய்ந்திடும்பிராணன் வியானனுங்கூடிப்பின்
பாங்காய்நாதவிந்திலாறு முண்டங்குலம்
தாழ்ந்துநெட்டிட்டுக் கருவிலமைப்பதுந்தான்
வயதுமுப்பத்தஞ்செனுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 225
ஆகாசம் வாய்வுதசைந்துறவாகிடி
லரைநாழிவிந்துரெண்டங்குலம் பாய்ந்திடில்
சாகாதுநாதமும் விந்துந்தரித்திடுஞ்
சார்வாகுவயது முப்பத்தெட்டாண்டையே
வேதமதாகியகூர்மன் கிரிகரன்
விந்துநாதத்தினில் மிகுத்தெழுவங்குலம்
வாகமதாகியரை நாழிகைபின்பு
வளர்ந்துபாய்ந்திடில் வயதுகாணாற்பதே- வயது. 

பாடல் எண்:- 226
அக்கினியாகிய சுழியின்முனைதன்னி
லடர்ந்துவாய்வு அரையங்குலமோடிடில்
சிக்கியநாதமும் விந்துந்தரித்திடுஞ்
சிதறிக்கருவிலுறைந்திடு மாண்டையே
தக்கபுகழுஞ் சுழிமுனைதன்னில்
தயவாகவாய்வு மிணங்கியபோதினில்
பக்கஞ் சிதறியேபாய்ந்திடிலும்பின்பு
பாகமாய் விந்துகரைந்திடுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 227
ஓடியேவாய்வதுடனே விரைந்திடி
லோமென்ற நாதமும்விந்துந்தரித்திடில்
கூடிய திங்களொண்ணரையதுக்குள்
குழவிகரைந்து வெளியாகுமாண்டையே
நாடியபக்க நால்வாயுவுஞ்சேர்ந்திடில்
நாதமும்விந்து நயந்ததுபோகமாய்
மோடியேநின்று மிகவுந்தரித்திடில்
விழலாய்க்கரைந்து விழுந்திடுமாண்டையே- வயது. 

பாடல் எண்:- 228
திக்கெல்லாம்வாயுவு சிதறிநடக்கையில்
செப்பரிய நாதம்விந்துந்தரித்திடில்
கக்கல்திருவாயுவு திங்கள்மூன்றுக்குள்ளே
கருவிகரைந்து வெளியாகுமாண்டையே
சக்கரம்போலுஞ் சுழன்றிடில்வாயுவுந்
தானிறைந்தோடிடில்நா தவிந்தாவதும்
பக்கமுதைந்துகெர்ப்பங் கரைந்தங்ஙளே
பார்க்கத்திங்கள் நாளில்மார்க்கமீதாண்டையே- வயது. 

பாடல் எண்:- 229
உந்தியில்வாயுவுச ந்துநெட்டிட்டிடி
லோகங்கார நாதமும்விந்துந்தரித்திடில்
சந்தேகமில்லைதிங்களொன் றில்கெர்ப்பமுங்
கண்ணீராய்க்கரைந்து வெண்ணீராகுமாண்டையே
கூறியவாயுவுங்குறுக்கே சுழன்றிடில்
கொள்கையநாதமும்விந்து முதித்திடில்
மாறிடுமைந்தனீரொன் பதுதிங்களில்
மாளப்பிறந்தினிமாய்ந்திடு மாண்டையே- வயது. 

பாடல் எண்:- 230
தூறியகுண்டலி வட்டத்தினுள்ளே
சுருத்திடுவாயுவு முதித்திடும்போதினில்
வேறில்லைகெரப்பந் தரித்துப்பிறந்தபின்
மெய்யாய்த்திங்களொன்றுய்யவே மாண்டிடும்
தில்லைப்பதிதெனுமெல்லையில் வாயுவும்
செழித்து நடக்கையில்சேர்ந்துநாதவிந்து
வல்லமையாகத் தரித்துப்பிறந்தபின்
வருஷமீராண்டினில்மாண்டிடு மாண்டையே- வயது. 

பாடல் எண்:- 231
செல்வஆணும்பெண்ணுஞ் சேர்ந்துரதிகேளி
சித்திரலீலைசெயில் செயவிந்துநாதமும்
தொல்லைமைந்தன் பிறந்தல்லல்வயதொன்றில்
சொன்னேன்மடிந்திடில் சூதில்லையாண்டையே
வல்லமையாய்வந்து வாழ்பவித்தாகையால்
மாதர்மயல்கொண்டணு கிடாமல்மனம்
தொல்லைவாராதெனுந் திங்களோராண்டினில்
தோகையெனும் புணர்ந்தோர்களின்வல்லமை- வயது. 

பாடல் எண்:- 232
போதும்போதாதொருவாண்டு தசையெனும்
போகிபோகமிது பிசகாதிடில்
ஏதுவூழ்வினையாகமத்தோர் சொலு
மேதுவினைப்பயனேது பிணிவரா
மாதுபோகந்தசத்திங்களீ ரைஞ்சுதான்
வாததேகிவலுவாகு நூறாண்டுக்கும்
சாதுசத்தியகுணதாது வலுத்திடுந்
தந்தையிந்தமதிமைந்தன் பிறவியே- வயது. 

( விருத்தம் )
பாடல் எண்:- 233
மூலமதில் வாயுநின் றிலங்கும் போதில்
முதலான நாதவிந் துதித்த நேர்மை
ஆலவிடங்வ கடித்ததுபோ லாண்டு மூன்றி
லது வுயிர்போ மைந்தன்மடிந் தாக்கை வேறாம்
ஞானமுடன் வாய்வுசுழி சிதறி யோடில்
நாதவிந்து தித்துவய தஞ்சில் மாள்வான்
கோலமுடன் குண்டலியில் வாய்வு மோடில்
கொடியமைந்தன் வயதெட்டில் மாய்ந்த வாறே. 

பாடல் எண்:- 234
குறித்துநின்று வாய்வந்திக் கமலந் தன்னில்
குமுறியே நாதவிந்து தரித்த தாகில்
வறிதாகு மைந்தருக்கு வயதீ ரைஞ்சு
வாய்வுஞ்சுழி யடங்கில்வய திருபத் தைஞ்சு
பரிவட்டச் சுழிமுனைவிட்டு விட்டத்தில் வாய்வு
பாய்ந்திடவு நாதவிந்து பதினா றென்க
நெறியான வாயுவிதைப் பின்னிட் டேறில்
நிலைக்கின்ற நாதவிந் திருப தாண்டே. 

பாடல் எண்:- 235
கங்குல்பக லற்றவிடந் தன்னி லேதான்
கருதிமுனை யாடுகின்ற நாத விந்து
சங்கையில்லா ரதிபோகஞ் செய்யும் போது
தாதுவிந்து கருவூரி லுதித்த சங்கை
இங்கிதமா யிடைகலையி லுதிக்கப் பெண்ணா
மியல்வாகப் பிங்கலையி லுதிக்க ஆணும்
அங்கமதா யுபையத்தி லுதிக்க மேலும்
ஆணிரண்டு மொருவழியி லமைத்த வாறே. 

பாடல் எண்:- 236
எழுந்ததிரு மண்டபத்தி லிருந்த நாத
மியல்பான கருவூரி லுதிக்கும் போதில்
கொழுந்துமதி யிடைகலையில் பெண்ணே யாகுங்
குறைவில்லாப் பிங்கலையி லாணே யாகும்
வழிந்தெழுந்த விருகலையி லுதித்த தானால்
வசனித்தோம் பெண்ணுடனே யானே யாகும்
செழுத்தெழுந்த சாதிவகை யிரண்டுஞ் சொன்னேன்
ஜெகநாதர் கிருபையினால் தெளிந்த நூலே. 

பாடல் எண்:- 237
உதித்திலகு நாதவிந்து வட்டந் தன்னி
லுட்புகுந்த கருவூரி லுதித்த போது
துதித்திலகுஞ் சூரியனில் வாய்வு சேர்ந்தால்
சுழிகலையு மாறினதா லிரண்டு மாணாம்
விதித்திலகுஞ் சந்திரனில் வாய்வு சேர்ந்தால் 
விகற்பமில்லாப் பனிரெண்டு முதிக்க லாகும்
கதித்திலகும் பலபலவாய் நின்ற தானால்
காற்றதினா லாகாது ரவியு மாமே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 238
வேதமறைக் கெட்டாத மிகுந்தகரு வூர்வெளியாய்
நாதமுடன் வந்துதவு நடுவணையிற் சேர்கையிலே
சூதாகு நாடிசிறு துடித்தே வகுத்ததென்றால்
பேதமில்லை யாணாய் பிறமுகமும் பாராரே. 

பாடல் எண்:- 239
சக்கரநின் றாடுகின்ற சத்யமுயர் வீட்டிலொரு
சுக்கிலசு ரோணிதமுந் துய்யகரு வூர்தனிலே
அக்கரமாம் பிங்கலையு மதிர்ந்து துடித்ததென்றால்
திக்கினியப் பெண்ணால் திருட்டுமிகச் செய்வாரே. 

பாடல் எண்:- 240
நிலையாய்க் கலையோதி நின்றுதிரு வீட்டிலொரு
அலையாத நாதவிந்து அணிவரையிற் சேர்கையிலே
துலையா மிடதுகலை துரியமதி லேயிரண்டால்
விலைமதிக்கு மாணாகும் வெகுதிருட்டுச் செய்வாரே. 

( வெண்பா )
பாடல் எண்:- 241
சண்டவெளி தாரகையில் சச்சிதா நந்தமதில்
கொண்டலெனு நாதவிந்துகூடினால்- ஒன்றதுவாய்
முட்டிச் சுழிநாடி மூன்றுந் துடித்தக்கால்
வெட்டிமடிந் திடுவார் வீண். 

பாடல் எண்:- 242
அரியயனுங் காணாத ஆதிதிரு நாதவிந்து
மரியதனு வீட்டில் வருமோ- குறியாக
வளருஞ் சுழிமுனைதான் மாறித் துடிதுடித்தால்
கருவி லுயிர்விடுவார் காண். 

( கலித்துறை )
பாடல் எண்:- 243
மதியாத வீட்டி லதிபோகஞ் செய்து மனமகிழ்ந்து
பதியான நாதவிந்த துங்கூடி யேபயி ராகியபின்
சதியாக நின்று சுழிமுனை நாடித் தயங்கினதால்
கெதிவேறு மில்லை வெகுநோய்கள் கண்டு கிடந்தனரே. 

பாடல் எண்:- 244
கருத்தை யிருத்தி யனுராக மாய்கை கலக்கையிலே
மருத்தெழு நாதமும் விந்ததுங் கூடி மருவியபின்
அருந்தி டும்வாச லப்பாற் சுழிமுனை யசைந்த தென்றால்
தரித்திடு மைந்தர் சுரம்வந்து சூழ்ந்து தயங்குவரே. 

( விருத்தம் ) 
பாடல் எண்:- 245
வையமெனும் பதினாலு வுலகுக் குள்ளே
வகுத்தெழுந்த சாதிகுல மாண்பெண் ரெண்டும்
சையோகஞ் செய்கையிலே நாத விந்து
தரித்தகெர்ப்பந் தனக்குவய துரைத்தேன் கேளீர்
குய்யமெனும் வச்சிரப்பை தனில்வ ளர்ந்த
குழவியர்க்கே வயதுநின்ற குறியுஞ் சொன்னேன்
மெய்யெனவே யோடுகலை நாலி னாலே
விளைகின்ற பொருளையெல்லாம் விளம்பு வேனே. 

பாடல் எண்:- 246
சுழியெழுத்து மரியெழுத்து மிரண்டுங் கூடிச்
சுக்கிலமே சிவயமெனுஞ் சொல்லும் போது
சுழியெழுத்து நாலதனா லுலக மாச்சு
கனகஜெக சாலமெனுங் காட்டி வைத்து
வெளியெழுத்தாம் அவ்வதிலே உவ்வுங் கூட்டி
விளங்குகின்ற குண்டலியி லுதிக்கும் போது
குழியெழுத்தில் வளருகின்ற மைந்தர்க் கெல்லாங்
குருடுசெவி டானவகை கூறு வோமே. 

பாடல் எண்:- 247
தப்பாது கருவூரின் வெளியி லேயான்
தாண்டியுயர் நாதவிந்து திக்கும் போதில்
வெப்பதிக சப்பாணி நொண்டி யாக
விதிக்கின்ற கருவிலே விளங்கும் வாறும்
ஒப்பதித வொருகாலு மொருகை நொண்டி
யோங்கியொரு பிறமுடலு திக்கு நேர்மை
கற்பான கலைநாலில் வகுத்து நின்ற
கருத்தையுமே யின்னதென்று காட்டு வேனே. 

அவயவங் குறையுமுறை
( தரு )
வித்தில்வின்னமெய்துமாண்டே- இனி
வினைப்பயனருளுவேனாண்டே. 

பாடல் எண்:- 248
தோத்திரத்தோடுதொக்குந்துடராதே துண்டித்துப்போனால் அகம்
வேற்றுமையாயுடல்வேறு கூறாகிடுமாண்டே
மாத்தியசட்சுசிங்குவை யாக்கிராணமருவாதேபோனால்- அந்த
வெற்றிடுநாக்குமூக்குவிழியு குறையுங்காணாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 249
சத்தபரிசரூபந்தானதுஞ் சாராமற்போனால்- மதி
வெத்திச்செவிடுடனே குருடும்விவேகமில்லா தாண்டே
புத்திர சமுங்கெந்தம்பொருந்தாமற்போய் விடுமாகில்- வாக்கு
எத்தனைசொன்னாலுஞ்செவியிசை வுபடாது ஊமையாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 250
தூக்கியரசமுங்கெந்தந் தொந்தித்திராதெனுமாகி- உடல்
நோக்கியகைகாலும்வாய்தொடித்துச் சப்பாணியாமாண்டே
வாக்கியபாதமுபாணிவதுவுபஸ்தஞ் சேராதென்னில்- லிங்கம்
ஓக்கியசுரணையற்றுவொடுக்கங் கொண்டிடுங்காணுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 251
வசனங்கெமனந்தானமதுவுஞ் சேராதிடில்என்னில்- வார்த்தை
மசக்கல்தடத்தவெனில்கொடுத்தல் வாராதுகாணாண்டே
விசர்க்கமானந்தமிரண்டுஞ் சேராதிடில்காணும்- மூல
மிசக்கல்மலசலமும் விடுத்திடாதுகாணாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 252
மனமாங்காரஞ்செயலும் வசனித்திராதிடில்வாதம்- கன
நினைவைக்கொண்டு விசாரித்தியல்பு கோபத்தைப்போக்குமாண்டே
செனனச்சித்தமுயற்சி சித்தமுடலும்வேறாய்ச்- சிதறி
இயல்புதினமுமறியுமன்புந் தயவுங்குறைந்திடுங்காணான்டே- வித்தில். 

பாடல் எண்:- 253
பரிவாகிடுதல்நெஞ்சமறிவொன்றதுஞ் சேராதேபோனால்- இந்தப்
பரியாசம்புவியதனில்பாரிலொன்று நடக்காதாண்டே
சிறியத்துரியகலைசுழியிற் சேராதிடிலும்போனால்- விழியும்
சிதறிச் சுருங்கியிருமுழியுங்கலங்கிடுங் காணாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 254
இடைபிங்கலையுஞ் சுழிமுனையுஞ் சேராதிடிலும்- வேறாய்
இன்பமிடறுங்கூனாய்க்குருடாய் முருடுமொண்டியுமாகுமாண்டே
திடசிங்குவைபுருடனிரண்டுஞ் சேராதிடினுமாகில்- அன்னம்
திடப்படாதுசெவியுஞ் சிமிட்டிடாதுகாணாண்டே- வித்தில்.  

பாடல் எண்:- 255
காந்தாரியத்திரண்டதுங்கலந் துறவாடிடாதாகில்- நல்ல
கந்தமுஞ்சந்தஞ்செவியுங்கருதான் குறைந்திடுகாணாண்டே
சுந்தரவலம்புருடன்சங்குனி ரெண்டதுஞ்சேராதாகில்- இந்த
மைந்தனிடதுதாள்வாயதாதுலிங்கம் குறையுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 256
பேதமாகியக்குரோதன்பின்பு சேர்ந்திடிலும்- போனால்
பித்தும்பிதற்றுஞ்சுரணையற்றுப் பிரியுமறிவுசொக்குமாண்டே
போதகப்பிராணனபானன்வியானனுஞ் சேராதிடிலுமாகில்- பிரியா
பேதித்துவன்னமுமலம்பிரித்து விடாதுகாணுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 257
உதானனுஞ்சமானன்கூர்மன்னுகந்து சேராதிடிலுமாகில்- சலம்
இறக்கமில்லாமல்மனஞ்செலுத்தேப்ப மிடுப்பிக்குமாண்டே
சூதனாந்திரிகரனுமாறியே சேராதிடிலுஞ் சேர்ந்தால்பார்வை
நீதவிழிமாறிடுஞ்சாதனையி தாகிடுமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 258
சத்தமுயிர்தேவதத்தன்வித்திலுஞ் சேராதிடிலுமாகில்- நல்ல
புத்தியுங்கொட்டாவிவிக்கல்நகைப்புஞ் சிரிப்பில்லைகாணாண்டே
மத்தலத்தனஞ்செயனுமவ்விடம் விட்டதுசேரா- தாகில் 
சுத்தம்வித்தையும்பத்தியுங்கல்விவிழலா முளமாந்த பித்தமாண்டே- வித்தில். 

பாடல் எண்:- 259
வாய்வதுவுமீரைஞ்சுவளர்பிறையு மீரெட்டுமோடில்- வாசி
தேய்பிறையுமீராறுதேறுநாடியுந் தசைமாறிகலைபாயுந்தேகாதி
தேகம்பகிரண்டங்களாவிபாய்ந்தும் அமைத்திடும்
நோயுமூழ்வினைமீறி நோக்குங்காசமோசாடிவினை- வித்தில். 

( விருத்தம் )
பாடல் எண்:- 260
மருவுயருங் கயிலைநக ரகண்ட வீதி
மறையிலகுந் திரை கடந்து நாத விந்து
உருவுயர்ந்த பதின்மூன்றாங் கோட்டின் மேலு
மோங்கியொரு துளியிறங்கித் திரண்டு மேவிக்
கருவளரு பெருகுதிகப் பதனா லேதான்
கனகரத்ன வீட்டிலொரு வீடு கட்டிக்
குருவிருந்த மண்டபத்தில் குடிதா னேறிக்
கூடிநின்ற குறிகளெல்லாஞ் சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 261
ஆதியென்ற நாதவிந்த மைந்த வாறு
மளவற்ற கருவிலுரு தரித்த வாறும்
நீதியுட னின்றுவய துரைத்த வாறும்
நிலைமையில்லாக் கருக்கரைந்து நின்ற வாறும்
வீதியிலே பிறந்தெழுந்து போன வாறும்
விவரமதை யின்னதென்று விதித்த வாறும்
பாதிமதி சடையணிந்த பரனே போற்றிப்
பத்தியுள்ள பெரியோர்கள் பாதம் போற்றி. 

பாடல் எண்:- 262
வடிவெழுதி முடியாத நாத விந்து
மாறியுயிர் கலைபிரிந்து பரத்தில் மேவும்
முடிவிலொரு மலரெனவே பூத்த வாறு
முனைசாய்ந்து வாடாமல் பின்சின் வாறும்
குடிலமெனு நடுவணையில் கருக்குள் வாறுங்
கூடியிரு கால்வாங்கி யடியிற்பாய்ந்து
மடிமீதில் கருவியெனும் வீடுண்டாக்கி
வகைவிபர மாகவெல்லாம் வகுத்தே னாண்டே. 

பாடல் எண்:- 263
உருவெடுத்து வந்தவர லாறு சொன்னேன்
ஊமையெனுஞ் செவிடான துருவுஞ் சொன்னேன்
கருவுதித்து நின்றசைவு வயதுஞ் சொன்னேன்
கலைபிரிந்து மாறுகின்ற கருத்துஞ் சொன்னேன்
துருவெடுத்துப் பூரகத்தி லுதித்து நின்ற
துயரமெல்லாம் விபரமுடன் சொன்னேன் காணும்
அறிவறிந்த பெரியோர்கள் புவியின் மீதி
வவர்மகிழ வவனியுள்ளே ரறியத் தானே. 

பாடல் எண்:- 264
விற்பனமாந் துருவவெளிக் கப்பால் நின்ற
மேலான சகலகலை நாவி னாலே
இப்பாரி லுதிக்கின்ற மைந்தர்க் கெல்லா
மியல்பான வறுமைநல மிகவுஞ் சொன்னேன்
கற்பான கற்பனையா லெழுந்த பாண்டங்
கருவிலுயி ராகிநின்ற கருந் துள்ளோர்க்குச்
சப்பாணி கூன்குருடா யான நேர்மை
சாதகமா யானறிந்து சாற்றி னேனே. 

( கொச்சகம் )
பாடல் எண்:- 265
நாற்சதுர மண்டபத்தில் நவ்வும்மவ்வும் ரெண்டிருந்து
தீச்சுடரை மூட்டியேதான் செங்கமல வீடதனில்
பேச்செழூம்பா வக்ஷரத்தில் பேசவுரு வாய்ப்படுதல்
காச்சி யுருக்கியொரு கருங்குகையில் விட்டனரே. 

பாடல் எண்:- 266
விட்டகுறை தன்னிலொரு விந்துகுறை யாகாமல்
நட்டுவிளை வித்தேனே நடுவனையி லேயிருந்து
முட்டி யெழுந்துமுனை மூலசுழி நால்வரையில்
கட்டி யுருக்கியதில் கருத்தால் வளர்ந்தேனே. 

பாடல் எண்:- 267
உள்ளிருந்த கள்ளரையு மூனெடுத்த நேர்மைகளும்
புள்ளிருந்த வாழ்மனையிற் புகுந்துரைத்த வாழ்த்தல்களும்
தெள்ளிருந்த தீவினையுந் தேகமிதித் தாக்கையதும்
வள்ளலெனு வம்பிகையின் வாய்மொழியாற் கண்டேனே. 

( கலித்துறை )
பாடல் எண்:- 268
தாக்கிப் பொருந்தையில் மூலத்தி னாதமுந் தாதுவிந்து
நோக்கிக் கலந்துரு வாகிய நுனியூ சிவழி
நீக்கிப் பகுத்த தலைநாசி யாலு நிரந்தரமாய்
வாக்கி லுயர்ந்த கனியாகி நின்று வளர்ந்தனனே. 

பாடல் எண்:- 269
கருத்தி லிருளை யகற்றி வெளியிற் கதிர்மதியில்
விருத்து வகுத்து விபரமதாய் வெற்றி யாகவேதான்
வருத்த மில்லாமல் சுழிவிட்டு வாசல் மதிநடுவில்
ஒருத்தனு மாகி வெகுஞாயங் கொண்டு திக்கின்றனனே. 

பாடல் எண்:- 270
இருளை யகற்றி மருளை விலக்கியே காக்ஷரத்தில்
பொருளை யடுத்துப் பயனறிந் துள்ளம் புவனம்விட்டு
அருளை யடுத்து அறைவீட்டி லோட்டி யடைத்துவைத்துத்
துளிரை வளைத்துத் தெவிட்டாக் கனியுண்டு தூங்கினனே. 

( வெண்பா )
பாடல் எண்:- 271
முக்கோணச் சக்கரத்தில் முப்பாழுக் கப்புறத்தில்
சட்கோண வீட்டுத் தலையிடியில்- அக்கோணம்
வெளியில் வளர்ந்தருளும் வெங்க நதியான
குழியில் வளர்ந்த குழவி. 

பாடல் எண்:- 272
வாசிகட்டிப் பந்தடித்து மாறி யிருகாலால்
நேசமுட னேபிடித்து நின்றறிந்து- ஓசைதனில்
ஆதிச் சிலம்பொலியை யண்டந் தனிலெழுப்ப
நீதியுட னேவளர்ந்து நின்றேன். 

பாடல் எண்:- 273
ஒட்டுப் பலகை யொருசாண் சிறுவீட்டில்
முட்டி வளர்ந்து முனையடியில்- நட்டு
அனந்தகம் பத்தடியி லகத்திய னேகண்டு
இன்பமுடன் யான்வளர்ந்தே னினி. 

( விருத்தம் )
பாடல் எண்:- 274
இப்படியே விழிமடவார் கெர்பபத் துள்ளே
யினிவளர்ந்த நேர்மையெல்லா மியம்புங் காலை
எப்படியுந் தப்பிதங்க ளினிவா ராமல்
என்னாலே யறிந்தமட்டு மியம்பி னேன்காண்
சொற்படியுஞ் சுழிமூல வீட்டுக் குள்ளே
துகையான கருவிநின்ற சூக்ஷா சூக்ஷம்
இப்படியே வகுத்துரைத்த மைந்தர்க் கெல்லாம்
இனியமுறை யிப்புவியி லியம்பு வேனே. 

பாடல் எண்:- 275
பத்தான திங்கள்சென்று பிறந்த பாலன்
பாக்கியமனு பவித்துப்பர தேசி யாகி
விஸ்தார மானபரி கரியு மேறி
விட்டகுறை தவிர்ந்துடனே யிறந்து வுண்ணும்
அஸ்தான திரவியத்தில் வாழ்ந்து மாறி
அதுகடந்து வையமடுத் ததுவு முண்டு
சித்தாடு கின்றசிவ யோகி யாகித்
திரிந்தவகை யறிந்தமட்டுஞ் செப்பு வேனே. 

பாடல் எண்:- 276
ஒருத்தனவன் கருத்தாலே யுலக மாள்வன்
உகந்துலகில் வாழ்ந்துஇரந் துண்டு வாழ்வன்
பெருத்தொருவன் புவியாசை பிரித்துக் கொள்வன்
பிராணன்வெறுத் தகமீறிப் பிதிர்களாவன்
துரைத்தனங்கள் செய்துபெருஞ் சிவிகை யேறிச்
சுவைமாறிச் சிவயோகஞ் செய்து வாழ்வன்
வெறுத்திந்தச் சபைதனிலே யாண்டே கேளீர்
விபரமெல்லாம் வெளியாக விளம்பு வேனே. 

பாடல் எண்:- 277
சுந்தரஞ்சேர் நாதவிந்து மூலந் தன்னில்
துளிபெருகி யொருமடையி லோடும் போது
அந்தமில்லா முகபேத மான வாறும்
அழகுமஷ்ட வயிஸ்வரிய மமைந்த வாறும்
சந்ததமி ழுரைத்தவர்கள் கற்ற வாறும்
சந்நியாசி தவசிகளாய்ச் சார்ந்த வாறும்
கந்தமலர்ப் பூங்குழலை வெறுத்து நின்ற
காரணத்தை யின்னதென்று கருது வேனே. 

பாடல் எண்:- 278
அறிவறிந்து மனுபோகஞ் செய்யா மாண்பர்
ஆதிவிந்து நாதமென்று மறியா மாண்பர்
கருவறிந்து பொறியடங்கிச் சித்த ரானார்
கருத்துமனம் ரெண்டாகி யோகி யானார்
திருவுடனே சேராமல் ஞானி யானார்
தேசமதில் பூசைசெய்யுஞ் சைவ ரானார்
குருவுடனே சீஷனென்று மிருவ ரானார்
குறிப்பறிந்து பிண்டமதிற் கூறு வேனே. 

பாடல் எண்:- 279
அலையாமல் பசியறிந்து உண்ணும் பேரும்
அனுதினமுந் துயரமதி லழுந்தும் பேரும்
நிலையாமல் நினைவுதடு மாறும் பேரும்
நித்திரையில் பயந்தெழுந்து நின்ற பேரும்
துலையாம லுலகமெல்லாந் திரிந்த பேரும்
சேர்ந்துமொரு சந்திதனில் மடிந்த பேரும்
மலையாமல் போர்க்களத்தில் ஜெயித்த பேரும்
வகித்தவிந்தி லுதித்தவகை வசனிப் போமே.

பாடல் எண்:- 280
மந்திரங்கள் கல்விமிகக் கற்ற பேரும்
மகத்தான சாஸ்திரங்கள் வகுத்த பேரும்
சிந்தையெனுங் கிரியைதனி லிருந்த பேரும்
ஜெகஜால மறிந்துலகில் வாழ்ந்த பேரும்
அந்தமெனும் யோகமதி லடர்ந்த பேரும்
அனாதியெனு ஞானமறிந் தமைந்த பேரும்
இந்தவகை யிப்படியே யான வாறும்
எனையீன்ற குருவருளா லியம்பு வேனே. 

இடைபின் கலையளவு
( தரு ) 
ஆராறமைத்தவிதியாண்டே- கருவூரினில்
யானும்விதித்தவிதியாண்டே. 

பாடல் எண்:- 281
பார்தனிலேகருவூர் பாலனமைந்தவிதி
சீர்பெறுஞ்செல்வமுண்டான செய்தியைச்சொல்லுவேனாண்டே
தாரணிதனிலேவதந்தைதாயுமிருவர்கூடி
கருவிரதிகேளிதானாடிய போதினில்- ஆரா. 

பாடல் எண்:- 282
ஓடுங்கதிர்மதியுமொன்றுட னிரண்டும்வளர்ந்தால்
நீடுலகும்புவியில்வாடு வார்வறுமைகொண்டு
ஓடுமதியுங்கதிரோ டிரண்டொன்றுபாய்ந்தால்
வீடுமிழந்துவையமேலுந் தரித்திரவான்காணும்- ஆரா. 

பாடல் எண்:- 283
முதல்மூன்றும்பூரணசந்திரன் விதமாயமைக்குமைந்தன்
சுதனருள்கல்வியும்பாக்கிய மதிகலைபதினாறெனில்
அதுவுமல்லாமனாலி லருணன்சோமனுங்கூடில்
விதியமுழையில்மைந்தன் விவேகியோகவானாண்டே- ஆரா. 

பாடல் எண்:- 284
நாலுகலைபிரியா ரவிதன்மதிவளரில்
பாலன்தனக்கெந்நாளும் வாலப்பருவங்காணும்
காலையில்பாலன்னஞ் சுவைசுகியோடதுமாறாது
காலனணுகாதஷ்ட கனயோகவான்காணும்- ஆரா. 

பாடல் எண்:- 285
வஞ்சிகெர்ப்பந்தனிலே வளருமதியஞ்சானால்
மிஞ்சும்புகழ்பாக்கியங் கொஞ்சும்யோகவானாண்டே
ரஞ்சிதக்கருக்குழியிலாத லால்மதியாறானால்
செஞ்சொலும்பார்தனிற்காணி செழிக்கும்பதியுண்டெனில்- ஆரா. 

பாடல் எண்:- 286
மாதுவிழிமடவாள் மதிசூலகெர்ப்பந்தனிலுந்
தாதுமதியேழெனில் தழைத்துவாழ்வார்கள்செல்வம்
சாதனமிதுதப்பாது நாதவிந்தாலனேகம்
பேதாபேதங்கள்கோடி மேதினியோர்களிவ்வாறு- ஆரா. 

( விருத்தம் )
பாடல் எண்:- 287
கங்குநதி நகரிலங் கருவூர் நாட்டில்
கதிர்மதியா லெடுத்தபலன் கணக்க தாக
மங்கையுடல் மாதுகெர்ப்பந் தனிலே விந்து
மகிமையதா யவதரித்த வண்மை யெல்லாம்
சிங்கார மாகவெந்தன் தெளிவி னாலே
திங்கள்பத்தி லுதித்தமைந்தன் செயலே கண்டு
செங்கமல மங்கையம்பி கைப்பெண் மாது
செப்பிடிலுங் கருத்தையினித் தெளிவிப் பேனே. 

பிண்டோற்பத்தி
( தரு )
தெந்தினதினதினனா- தினதின- தெந்தினதினதின- தினதினனா. 

பாடல் எண்:- 288
திட்டமுடன்வெட்டவெளியில்- கலையெட்டில்
செனித்தருள்கெர்ப்ப மதினுற்பவத்தைக்கேள்
வட்ட மதிவிட்டகுறையால்- செல்வம்
வளர்ந்திடுந்திருமுகம் விளைந்திடுங்காண் 
அட்டதிசையம்பரத்திலே- சுழியின்முனை
ஆதாரகுண்டலி தனகத்துக்குள்ளே
விட்டமதியொன்பதிலே- விந்துதரிக்க
விஜயராஜாங்கயோக வாசஞ்செய்வார்- தெந்தின. 

பாடல் எண்:- 289
உதித்தபெருந்துறைமூல- மூத்தைக்குழியி
லுற்பனமாகவேகெர்ப்பந் தரித்ததென்றால்
பதித்தசமதிலுதித்தால்- விந்துசிவ
பாருலகிலட்டசித்து மாடிடுவர்காண்
விதித்தவிதியறியாத- கருக்குழிதன்
வீதியிலுநாதமதுமேவிடிலுமே
பதித்தமதிபதினொன்றா- லட்டசுக
பாக்கியசிவயோக ராஜயோகியிவர்காண்- தெந்தின. 

பாடல் எண்:- 290
எண்ணிரண்டாங் கோட்டினிலே- சுரோணித
மென்றிருக்கின்றநாதமெனு முதிக்கையிலே
பன்னிரண்டில்மதியானா- லிப்புவியில்
பாராளுந்துரைத்தனஞ்செய் தரசாள்வார்
உன்னிதச்சுழிமுனையிலே- கெர்ப்பந்தரித்து
உற்பனமாகவேமதிபதி மூன்றானால்
இன்னிதராஜாங்கந்தனில்- மந்திரியாகி
யேகசக்கரவர்த்திகட்கு யோக்கியவான்காண்- தெந்தின. 

பாடல் எண்:- 291
மதிசந்திரன்பதினாறில்- கெர்ப்பந்தரிக்க 
வந்தவதரித்தமைந்தன் விந்துபலன்கேள்
பதிகருவூர்தனைவிட்டு- அம்புவியில்
பாலகனவதரித்தால் ஞானியாவார்காண்
மதிரவிநடனஞ்செய்யும் பூர்வக்கியான
வாசிவசமாகும் ரசவாதமுமெய்தும்
அதிவிதயோகதிசைவான்- மறுபிறவியாதலா
லாண்டவன் செயலமைப்பிதுவே- தெந்தின. 

பாடல் எண்:- 292
பாதகஞ்செய்திடுங்கருவூர்- அவ்வூரினில்
பதிக்குள்மைந்த னுதிக்கப்பலனதுகேள்
மூவஞ்சுமதியானால்- அம்மதியில்
முக்குணமதாகி வளர்சகுணவான் காண்
மேவுங்கருவூர்தனிலே- கெர்ப்பந்தரிக்க
மேதினிதனிலேமைந்தன் வீதிவந்தபின்
பூவுலகில்மூவுலகமே- கர்த்தவ்யமெனும்
புகழுடைய மும்மூர்த்தியீஸ்பரன்காண்- தெந்தின. 

பாடல் எண்:- 293
மருவுயர்திருவீட்டில் கருவூரினில்- வந்துதித்து
மைந்தர்களும் வரும்போது
பெருகியமதியீரெட்டில்- உதித்திலகும்
பிரபஞ்முழுந்திரக் கடலுலகுங்
கருவியிலுதித்தபலன்- இப்புவிதனில்
கனயோகச்சித்ததி கர்த்தனிவர்காண்
அருமறையோர்புகழும்- அம்புவிதனில்
அட்டஅவதானியென மனைவர்தொழும்- தெந்தின. 

பாடல் எண்:- 294
இந்துமதிவிந்துநாதமு- மிரண்டுங்கூடி
என்னுடைய தந்தையுடனன்னை சேர்ந்திடில்
மைந்தனாய்க்கருக்குழிதனி- லவதரித்து
வந்துதித்தபாக்கியமினி விந்தையாய்ச் சொல்வேன்
விந்துதிக்கும்விட்டகுறைகாண் இந்தமதி
அந்தணர்முனிவரெல்லாம் வந்துதித்தனர்
செந்தமிழ்க்கவிதையாய்ந்தனர்- ஞானப்புலவ
ரைந்துபூதமைந்துந்தெளிந்தவராண்டே-தெந்தின. 

( விருத்தம் )
பாடல் எண்:- 295
காரணத்தால் நாதவிந்து கருவூர் தன்னில்
கலந்துவுரு வாகிவந்த கருத்தை யெல்லாம்
சீர்படைத்த புவிதனிலே வகுத்து யானுந்
தெளிவாகத் தெரிந்தமட்டுஞ் செயலாய்ச் சொன்னேன்
வாரணமாஞ் செங்கமல வீட்டுக் கப்பால்
மாறுகலை நாலதுவால் வகுத்த நேர்மை
பேர்படைத்த பதினாறி லொன்று போனால்
பேருலகில் தவசியெனப் பிறப்பா ராண்டே. 

பாடல் எண்:- 296
குருவிருக்கு முப்பாலி லேதான் குய்ய
நடுவுமையத் தின்குறிப்புக் குள்ளி லேதான்
கருவுறையு நாதவிந்து கலக்கும் போது
கதித்தகலை மதியிரண்டு குறைந்த தாகில்
விருப்பமுடன் பார்தனிலே பிறந்த பின்பு
விளங்குஞ்செல்வம் பாதியிலே கழிந்துபோகும்
பருவமுள்ள பதின்மூன்றுங் குறைந்த தாகில்
பரதேசி யாகிடுவார் பாரி லாண்டே. 

பாடல் எண்:- 297
சிறுபிறைக்குள் திரைமறைந்து சிறந்த வீட்டில்
சித்துவித்தை கல்விதரு நாத விந்து
ஒருதுளிகொண் டிருதுளியு லுறையும் போது
வுதித்தகலை நாதனா லாண்டி யாவார்
தருவணையுங் கலையுமைந்த தானாற் கேளீர் 
சாந்தநற் குணமழகுஞ் செல்வ மட்டாம்
பெருமையெனு மாறிலுஞ்சன் னாசி யாவார் 
பேர்பெரிய யேழினிலு மதிதி யாண்டே. 

பாடல் எண்:- 298
வட்டமதி யெட்டுகலை குறைந்த தாகில்
வகுத்தவுடல் பெருத்திருக்கும் வளர்ச்சி யுண்டாம்
விட்டமதி கலையொன்பதுங் குறைந்த தாகில்
வீறாகப் பிறந்துவளர்ந் திரந்துண் பார்கள்
சட்டமதி கலைபத்தில் குறைந்த தாகில்
சாகுநாள் பரியந்தந் தரித்திர ராவார்
தொட்டகலை நீங்கிவிட திருக்கு மாகில்
தொல்லுலகி லுள்ளவர்க ளறிந்தி டீரே. 

பாடல் எண்:- 299
வடிவுகொண்ட திருமூலத் திரைக்குள் ளேதான்
மருவுகின்ற நாதவிந்து வமைந்த போது
முடிவுகின்ற மதிகுறைந்து பதினொன் றாகில்
முதலான வாழ்வுயுரு மீயா மூடர்
மிடிகொண்டு விருளகற்றி வளர்ந்து மேன்மேல் 
மேலான பல்களையு மீரா ராகில்
குடியிருக்குங் குறையில்லா தாச்சு தாகில்
குவலயத்தி னாற்பதிலே சித்த ராண்டே. 

பாடல் எண்:- 300
சிவ்வெழுத்து மவ்வெழுத்து மிரண்டுங் கூடிச்
சிறந்திருந்த அவ்வெழுத்தில் வவ்வுஞ் சேர்ந்து
நவ்வெழுத்தி லுதித்தருளு மைந்தர்க் கெல்லாம்
நயந்துசரி வாழ்த்தின்பின் னிரந்துண் பார்கள்
மவ்வெழுத்து நவ்வெழுத்து மிரண்டுஞ் சேர்ந்து
மகிழும்யவ்விவ் வவ்வெழுத்துஞ் சிவ்வுண்டாகி
இவ்வுலகி லுதித்தருளும் பாலர்க் கெல்லா
மினியசரி பாதிவாழ்ந் திரந்துண் பாரே. 






















































Comments

Popular posts from this blog

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900